தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகே டிராக்டர் மீது கார் மோதி கோர விபத்திற்குள்ளானதில், காரில் பயணித்த உடன்குடி பேரூராட்சி மன்ற பெண் கவுன்சிலர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியைச் சேர்ந்தவர் அசோகன். இவரது மனைவி அன்பு ராணி (55). இவர் உடன்குடி பேரூராட்சி மன்ற கவுன்சிலராக உள்ளார். கவுன்சிலராக இருப்பதுடன், தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் எஸ்சி-எஸ்டி பிரிவு தலைவராகவும் உள்ளார்.
இந்நிலையில் தனது மகன் நேருவுடன் (31) காரில் மதுரையை நோக்கிச் சென்று கொண்டிருந்தார். கவுன்சிலர் அன்பு ராணி காரின் முன் இருக்கையில் அமர்ந்திருக்கையில் காரை, அவரது மகன் நேரு ஓட்டிச் சென்றார்.
தூத்துக்குடி - மதுரை நெடுஞ்சாலையில் மேலக்கரந்தை அருகே இவர்களது கார் சென்றுக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக முன்னால் சென்ற டிராக்டர் மீது மோதி விபத்திற்குள்ளானது. இதில் அன்பு ராணி பலத்த காயம் அடைந்தார். அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து மாசார்பட்டி காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து, டிராக்டர் டிரைவரான எட்டயபுரம் ராஜா நகரை சேர்ந்த சரவணன் மகன் மகாராஜன் (29) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது