ஹரியானா மாநிலத்தில் நடந்த ஒரு சம்பவம் மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. அதாவது முகமது இர்ஃபான் என்ற 21 வயது வாலிபர் தன்னுடைய தாய் வழி பாட்டியானா சுல்தானா காட்டூன் என்ற 65 வயது மூதாட்டியை திருமணம் செய்துள்ளார்.
அதாவது தன்னுடைய தாய் வழி பாட்டியை கவனித்துக் கொள்ள ஆளில்லாததால் அந்த 21 வயது வாலிபர் மூதாட்டியை உடனிருந்து கவனித்துக் கொண்டார். சுல்தானாவின் கணவர் இறந்த பிறகு அவரை பராமரிக்கும் பொறுப்பின் காரணமாக பாட்டி மற்றும் பேரன் இடையே அன்பு அதிகரித்தது.
இந்த அன்பு நாளடைவில் காதலாக மாறிய நிலையில் தற்போது இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இதற்கு முன்பும் கடந்த 2018 ஆம் ஆண்டு 27 வயதான ஹிரியான்வி நபர் ஒருவர் பேஸ்புக் மூலம் பழகி 65 வயதான அமெரிக்க பெண்ணை திருமணம் செய்தார். மேலும் தற்போது பாட்டி மற்றும் பேரனின் காதல் திருமண உறவு பரபரப்பாகவும் அந்த பகுதியிலும் சமூக வலைதளத்திலும் பேசப்படுகிறது.