மாரி செல்வராஜ் தமிழ் சினிமாவில் பணியாற்றும் திரைப்பட இயக்குனர் மற்றும் எழுத்தாளர் ஆவார். ஆரம்பத்தில் இயக்குனர் ராமிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தார் மாரி செல்வராஜ். பின்னர் 2018 ஆம் ஆண்டு பரியேறும் பெருமாள் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார் மாரி செல்வராஜ்.
முதல் படமே அவருக்கு நல்ல விமர்சனங்களை பெற்று தந்தது. அனைவரின் பாராட்டுகளையும் பெற்று கவனத்தை ஈர்த்தார் மாரி செல்வராஜ். அடுத்ததாக 2021 ஆம் ஆண்டு தனுஷை வைத்து கர்ணன் திரைப்படத்தை இயக்கினார். இந்த திரைப்படமும் வெற்றி பெற்றது. அடுத்ததாக 2023 ஆம் ஆண்டு மாமன்னன் திரைப்படத்தை இயக்கினார். இந்த திரைப்படமும் நல்ல விமர்சனங்களை பெற்றது.
2024 ஆம் ஆண்டு வாழை திரைப்படத்தை இயக்கினார் மாரி செல்வராஜ். இது உணர்வுபூர்வமாக அனைவரையும் கலங்கடித்துவிட்டது என்று சொல்லலாம். இவர் இயக்கும் படங்களில் மிகவும் ஆழமான கருத்துக்கள் மனத்தை பிழிய வைக்கும் உணர்வுகள் நிறைந்ததாக இருக்கும். தற்போது தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குனர்களில் ஒருவராக இருக்கிறார் மாரி செல்வராஜ்.
இந்நிலையில் சித்தார்த் நடித்த 3 bhk பட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாரி செல்வராஜ் அவர்களிடம் பத்திரிகையாளர்கள் பல கேள்வி கேட்டனர். அதில் ஒரு பத்திரிக்கையாளர் சிறிய பட்ஜெட் படங்கள் தான் இப்போது எல்லாம் ஓடுகிறது என்று சொன்னார். அதை தடுத்து நிறுத்திய மாரி செல்வராஜ் சிறிய பட்ஜெட் படம் எல்லாம் ஓடும்னு சொல்லாதீங்க நல்ல படங்கள் எல்லாமே ஓடும் என்று சொல்லுங்க என்று கூறினார். அதுமட்டுமல்லாமல் ஸ்ரீகாந்த் போதை வழக்கில் கைதானது பற்றி கேட்கும் போது தவறு செய்தால் எல்லோரும் தண்டனை அனுபவிக்க வேண்டும் நடிகர்கள் விதிவிலக்கில்லை என்றும் கூறினார் மாரி செல்வராஜ்.