தமிழகத்தில் 2026ல் நிச்சயம் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும், அதில் பாஜகவும் அங்கம் வகிக்கும் என அமித் ஷா உறுதிபட தெரிவித்துள்ளார். தனியார் நாளிதழ் ஒன்றிக்கு அவர் பேட்டியளித்த நிலையில் லோக்சபா தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் ஆராய்ந்து பார்த்தால், தேசிய ஜனநாயக கூட்டணியே வெற்றி பெறும் எனக் கூறியுள்ளார். சட்டப்பேரவைத் தேர்தலில் கூடுதல் பரப்புரை மூலம் ஓட்டுகளை திரட்டினால், நிச்சயம் NDA அரசு அமையும் என கூறினார்.
தமிழகத்தில் கூட்டணி அரசு அமைக்கப்படுமா? என்ற கேள்விக்கு பதிலளித்த அமித்ஷா, “தேசிய ஜனநாயக கூட்டணி நிச்சயம் ஆட்சி அமைக்கும், அதில் பா.ஜ.க.வின் பங்கும் இருக்கும். தேர்தலில் நாங்கள் அ.தி.மு.க தலைமையின் கீழ் போட்டியிடுவோம். அதிமுகவில் இருந்து பிரிந்தவர்களை நாங்கள் ஒன்றிணைக்கவில்லை, அது அவர்கள் கட்சி பிரச்சனை. அவர்கள் தாங்களாக தான் முடிவு எடுக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
NDA கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் குறித்து ”தேர்தலில் நாங்கள் அதிமுக தலைமையின் கீழ் போட்டியிடுகிறோம். அக்கட்சியில் இருந்து முதலமைச்சர் வருவார்” என கூறியுள்ளார். முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி பெயரைக் குறிப்பிடாமல் பேசியதால் அதிகமுகவினர் அதிர்ச்சியடைந்தனர். NDA கூட்டணியில் தவெக இணையுமா என்ற கேள்விக்கு “சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் போதுமான கால அவகாசம் உள்ளது. எனவே சில காலம் காத்திருங்கள்” என கூறியுள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது