பள்ளிக்கு பறந்து வந்த பறவை….! “தொண்டையில் பென்சில் சிக்கி…” சுதாரித்த ஆசிரியர்கள்…. அப்புறம் என்னாச்சு தெரியுமா…?
SeithiSolai Tamil July 05, 2025 03:48 AM

கேரள மாநிலம் வயநாடு அருகே உள்ள பொழுதானா பகுதியில் உள்ள அரசு பள்ளியில் அரியதொரு சம்பவம் நிகழ்ந்தது. பள்ளிக்குள் பறந்துவந்த ஒரு பறவை, தரையில் இருந்த பென்சிலை விழுங்க முயன்றபோது, அது தொண்டையில் சிக்கி தவிக்கத் தொடங்கியது. பறவையின் நிலை மோசமாக இருந்ததை கவனித்த ஆசிரியர்கள் உடனடியாக வனத்துறைக்கு தகவல் வழங்கினர்.

தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறை அதிகாரிகள், பறவையை மெதுவாக பிடித்து அதன் வாயில் கையை நுழைத்து பென்சிலை பாதுகாப்பாக எடுத்தனர். இந்த செயல்பாட்டால் பறவையின் உயிர் பத்திரமாக மீட்கப்பட்டது.

பறவையை பாதுகாக்க வனத்துறை எடுத்த நடவடிக்கைக்கு பள்ளியினரும், பொதுமக்களும் பாராட்டு தெரிவித்துள்ளனர். வன உயிரினங்களை பாதுகாப்பது எவ்வளவு முக்கியம் என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு எனக் கூறப்படுகிறது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.