பாலஸ்தீனத்திற்கு தனி நாடு அங்கீகாரம்... பிரான்ஸ் அதிபர் அறிவிப்பு!
Dinamaalai July 27, 2025 11:48 PM

தனி நாடாக உருவாகிறது பாலஸ்தீனம். பாலஸ்தீனத்துக்கு தனி நாடு அங்கீகாரம் அளிப்பதாக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் அறிவித்துள்ளார். இந்த முடிவு  செப்டம்பரில் நடைபெறவுள்ள ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.  இது இஸ்ரேல் – பாலஸ்தீன் பிரச்னையை முடிவுக்குக் கொண்டுவர இம்முடிவு வழிவகுக்கும் என அதிபர்  கடிதம் எழுதியுள்ளார்.

பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸுக்கு மேக்ரான்  இது குறித்து  எழுதியுள்ள கடிதத்தில்  ”காஸாவில் மனிதாபிமான நெருக்கடி மற்றும் போர் நிலவிவரும் சூழலில், இரு தேசத் தீர்வை முன்னெடுத்துச் செல்லும் வகையில் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவை கோபப்படுத்தியுள்ளது. பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கும் பிரான்சின் முடிவுக்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அக்டோபர் 7ம் தேதி  இஸ்ரேலிய பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது ஒரு அவமானமாக கருதப்படுகிறது என  அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ கூறியுள்ளார். மேலும், பிரான்சின் முடிவை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு  அமைதி முன்னெடுப்புகளுக்கு தீங்கு விளைவிக்கும் எனக் கூறியுள்ளார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.