பாலைவன வாழ்வின் சின்னமாகக் கருதப்படும் ஒட்டகம் குறித்து பலரும் பேணும் நம்பிக்கைகள் அனைத்தும் உண்மையல்ல. மூட நம்பிக்கைகளை நிபுணர்கள் முறித்தெறிந்து, ஒட்டகத்தின் உண்மை தன்மைகள் என்ன என்பதை விளக்குகின்றனர்.
திமிலில் தண்ணீர் இல்லை!ஒட்டகங்கள் தங்களது திமில்களில் தண்ணீரை சேமிக்கின்றன என்பது முற்றிலும் தவறான நம்பிக்கை. உண்மையில், திமில்கள் கொழுப்பால் நிரம்பியவை. இந்த கொழுப்பு, உணவு இல்லாத சூழலில் ஆற்றலாக மாறி ஒட்டகத்தின் வாழ்வைத் தொடர உதவுகிறது. கொழுப்பு இல்லாதபோது, திமில்கள் சுருங்கி விடுகின்றன.
திமிலில் இருக்கும் கொழுப்பின் ஆற்றல் காரணமாக ஒட்டகங்கள் பல மாதங்கள் வரை உணவின்றி உயிர்வாழ முடியும். இதுவே அவைகளை நீண்ட தூரம் பயணிக்கச் செய்யும் முக்கியமான காரணம்.
இதையும் படிங்க: உணவு மற்றும் தண்ணீர் இல்லாமல் பல நாட்கள் வாழக்கூடிய விலங்குகளின் லிஸ்ட்! எந்த எந்த விலங்குனு பாருங்க...
உலகில் உள்ள ஒட்டக வகைகள்மூன்று முக்கியமான ஒட்டக வகைகள் உள்ளன:
ஒட்டகக் குட்டிகள் பிறக்கும் போதெல்லாம் திமில்கள் இருக்காது. பிறந்த பத்து மாதங்களுக்குப் பிறகே திமில்கள் வளரத் தொடங்குகின்றன என்பது ஓர் ஆச்சரிய தகவல்.
ஒட்டகங்கள் தண்ணீரின்றி வாரக்கணக்கில் உயிர்வாழும் சக்தி பெற்றவை. தண்ணீர் கிடைக்கும் போது, குறுகிய நேரத்தில் அதிக அளவு குடிக்க முடியும். சில நேரங்களில் மூன்று நிமிடங்களில் 200 லிட்டர் வரை குடித்து விடும்.
இவ்வாறு, ஒட்டகங்கள் மீது நிலவும் பல பொதுவான நம்பிக்கைகள் முற்றிலும் தவறானவையாகும். இயற்கையின் ஆச்சரியமான உயிரினமாக ஒட்டகம் தன்னைத் தானே தாங்கும் பலன்களை அறிவியலால் புரிந்து கொள்ளலாம்.
இதையும் படிங்க: உணவு மற்றும் தண்ணீர் இல்லாமல் பல நாட்கள் மற்றும் பல ஆண்டுகள் வரை வாழக்கூடிய விலங்குகளின் லிஸ்ட் இதோ!