நாம் பெரும்பாலும் மன அழுத்தத்தை (Stress) லேசாக எடுத்துக்கொள்கிறோம், ஆனால் அது நம் இதயத்தில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது உங்களுக்குத் தெரியுமா? இன்றைய வேகமான வாழ்க்கை, மோசமான பணிச்சூழல், உறவுகளில் ஏற்படும் சிக்கல்கள் மற்றும் எதிர்காலத்தைப் பற்றிய கவலைகள் என இவை அனைத்தும் சேர்ந்து படிப்படியாக உங்கள் இதயத்தின் ஆரோக்கியத்தை பாதிக்கும் முக்கிய காரணிகள். மன ஆரோக்கியத்திற்கும் இதய ஆரோக்கியத்திற்கும் இடையே ஆழமான தொடர்பு இருப்பதாக மருத்துவர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். மன அழுத்தம் நாளடைவில் ஹார்ட் அட்டாக் (Heart Attack) ஏற்படுவதற்கு கூட காரணமாக அமையலாம். இந்த கட்டுரையில் மன அழுத்தத்தில் இருந்து எப்படி விடுபடுவது என்று பார்க்கலாம்.
மக்கள் அதிக மன அழுத்தத்தில் இருக்கும்போது, சிகிச்சை பெற வேண்டும் என்ற விழிப்புணர்வு அவர்களுக்கு இருப்பதில்லை. மேலும் மது அருந்துதல், புகைபிடித்தல், குறைவாக சாப்பிடுதல், ஜங்க் ஃபுட் சாப்பிடுதல், குறைவான தூக்கம், உடல் செயல்பாடு இல்லாதது, சூரிய ஒளி படாமல் இருப்பது, யாருடனும் உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது போன்ற பழக்கங்கள் மக்களிடையே அதிகரித்து வருகிறது. இந்தப் பழக்கங்கள் அனைத்தும் படிப்படியாக உங்களை கடுமையான ஆபத்தை நோக்கி அழைத்துச் செல்கின்றன. இது இதயத்தில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
இதையும் படிக்க : மார்பு அழுத்தம், வியர்வை.. இந்த அறிகுறிகள் இருக்கா? மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு
மன அழுத்தம் இதயத்தை எவ்வாறு பாதிக்கிறது?டெல்லி ராஜீவ் காந்தி மருத்துவமனையின் இருதயவியல் துறையின் இணைப் பேராசிரியர் டாக்டர் அஜித் ஜெயின் இதுகுறித்து தெரிவித்ததாவது, ஒருவர் மன அழுத்தத்தில் இருக்கும்போது, உடலில் அட்ரினலின் மற்றும் கார்டிசோல் போன்ற சில ஹார்மோன்களின் அளவு அதிகரிக்கிறது என்று விளக்குகிறார். இதனால் பதற்றம் அதிகரித்து இதயத்துடிப்பு அதிகரிக்கிறது, இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. இந்த நிலை நீண்ட காலம் நீடித்தால், இரத்த நாளங்கள் சுருங்கத் தொடங்கி, வீக்கமடையக்கூடும். இது இதய தமனிகளில் அடைப்பை ஏற்படுத்துகிறது, இது மேலும் மாரடைப்பை ஏற்படுத்தும்.
இதையும் படிக்க :பதட்டத்தில் இருக்கும்போது அதிகரிக்கும் இதயத் துடிப்பு – நோயின் அறிகுறியா?
மன அழுத்தத்தை தவிர்ப்பது எப்படி?