ஆவின் பாலகம் அமைக்க மானியம் வழங்கும் திட்டம். தற்போது, இந்த திட்டத்துக்கு எப்படி விண்ணப்பிப்பது? யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? மானியம் எவ்வளவு?
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூகத்தினரின் வறுமை நிலையை குறைப்பதற்காக, சுயதொழில் தொடங்க விரும்பும் தொழில் முனைவோருக்கு உதவும் நோக்கத்தில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (TAHDCO) சார்பில் செயல்படுத்தப்படும் திட்டம் தான் ஆவின் பாலகம் மானியத் திட்டம் (TAHDCO Aavin Palagam Subsidy Scheme). இந்த திட்டத்தின் கீழ், ஆவின் பாலகம் அமைக்க விருப்பம் உள்ளவர்களுக்கு திட்டத் தொகையில் ரூ.90 ஆயிரம் மானியமாக வழங்கப்படுகிறது.
தாட்கோ திட்டத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின தொழில்முனைவோர் ஆவின் பாலகம் அமைப்பதற்கு உதவியாக ஒருவருக்கு ரூ.3 லட்சம் திட்ட மதிப்பீட்டில் 30 சதவீதம், அதாவது ரூ.90 ஆயிரம் மானியமாக அரசு சார்பில் வழங்கப்படும். இதை வைத்து பாலகத்திற்கு தேவையான மின் வாகனம், உறைவிப்பான், குளிர்விப்பான் போன்ற மின் உபகரணங்கள் கொள்முதல் செய்து கொள்ளலாம்.
இந்த திட்டத்தின் கீழ் மானியக் கடன் கோரும் தொழில் முனைவோர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூகத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும், விண்ணப்பதாரர் 18 முதல் 55 வயதுக்குள் இருக்க வேண்டும். விண்ணப்பதாரரும் அவரது குடும்ப உறுப்பினர்களும் தாட்கோ திட்டத்தின் கீழ் இதுவரை எந்த மானியத்தையும் பெற்று இருக்கக் கூடாது.
ஆவின் பாலகம் அமைக்க தேர்ந்தெடுக்கப்படும் கடையின் இடம் குறைந்தபட்சம் 100 சதுர அடியாக இருக்க வேண்டும். அந்த இடம் விண்ணப்பதாரருக்கு சொந்த அல்லது குத்தகை அல்லது வாடகைக் கட்டிடம் ஆக இருக்கலாம். மேலும், அதற்கான ஆதாரத்தை சமர்ப்பிக்க வேண்டும். வணிகத்தை தொடங்குவதற்கு முன்பு, விண்ணப்பதாரர் (FSSAI) நிறுவனத்தில் இருந்து உணவு உரிமைத்தைப் பெற வேண்டும்.
அதுமட்டுமல்லாமல், அடையாள பலகை (Sign Board), உட்புற வடிவமைப்பு (Interior) போன்றவற்றை விண்ணப்பதாரரே மேற்கொள்ள வேண்டும். குளிர்விப்பான் (Cooler) மற்றும் உறைவிப்பான் (Freezer) குறைந்தபட்ச கொள்ளளவு 200 லிட்டராக இருக்க வேண்டும். மேலும், விண்ணப்பதாரர் ஆவின் நிறுவனத்தில் அவ்வப்போது செயல்படுத்தப்படும் விதிகள் மற்றும் ஒழுங்கு முறைகளைப் பின்பற்ற வேண்டும்.
தாட்கோ ஆவின் பாலகம் மானியம் பெற தேவையான ஆவணங்கள்:
தாட்கோ ஆவின் பாலகம் மானியத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி?
இந்த திட்டத்தின் கீழ் மானியம் பெற விரும்பும் தொழில் முனைவோர்கள், பாலகம் அமைக்க விருப்பமுள்ளவர்கள், உரிய ஆவணங்களுடன் அந்தந்த மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் அலுவலகத்திற்கு நேரில் சென்று விண்ணப்பிக்கலாம். (அல்லது) தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் https://tahdco.com/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவு செய்யலாம்.