குஜராத் மாநிலத்தின் கடல் எல்லையை தாண்டி இந்திய எல்லைக்குள் ஊடுருவிய 15 பாகிஸ்தான் மீனவர்களை இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.
எல்லை பாதுகாப்புப் படையினருக்கு வந்த உளவுத்துறை தகவலின் அடிப்படையில், பி.எஸ்.எஃப்-இன் 68-வது பட்டாலியன் வீரர்கள் குஜராத் மாநிலம் கோரி க்ரீக் கடல் பகுதியில் தீவிர ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, இந்திய-பாகிஸ்தான் கடல் எல்லைக்கு அருகே அத்துமீறி நுழைந்த மீனவர்கள் குழுவை அவர்கள் கண்டறிந்தனர்.
உடனடியாக செயல்பட்ட பி.எஸ்.எஃப். வீரர்கள், அந்த குழுவில் இருந்த 15 பாகிஸ்தான் மீனவர்களையும், அவர்கள் பயன்படுத்திய படகையும் கைப்பற்றி கைது செய்தனர். விசாரணையில், கைது செய்யப்பட்ட மீனவர்கள் பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள சுஜாவல் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.
கைது செய்யப்பட்ட மீனவர்களிடமிருந்து, சுமார் 60 கிலோ மீன்கள், ஒன்பது மீன்பிடி வலைகள், டீசல், உணவுப் பொருட்கள், ஐஸ், மரக் குச்சிகள், ஒரு மொபைல் போன் மற்றும் பாகிஸ்தான் நாணயம் ரூ. 200 ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட மீனவர்களிடம் எல்லை பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Edited by Siva