இந்தியாவின் ஆழ்கடல் பாதுகாப்புத் திறனை மேலும் வலுப்படுத்தும் முக்கியமான திட்டத்தை மத்திய அரசு எடுத்து உள்ளது. வரும் 2026-ஆம் ஆண்டுக்குள், ரூ. 1 லட்சம் கோடி மதிப்பிலான இரண்டு நீர்மூழ்கிக் கப்பல் (Submarine) ஒப்பந்தங்களை இறுதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
சீனாவின் கடற்படை வலிமை கடந்த சில ஆண்டுகளில் வேகமாக அதிகரித்து வருகிறது. இந்தியப் பெருங்கடலில் தனது செல்வாக்கை விரிவுபடுத்தும் முயற்சியில் சீனா தீவிரமாக செயல்படுகிறது. இதற்கு எதிராக இந்தியா தனது நீர்மூழ்கிக் கப்பல் படையை நவீனப்படுத்தி, கடல்சார் பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில் இந்த திட்டத்தை முன்னெடுத்து வருகிறது.
ஸ்கார்பின் வகை (Scorpene Submarine)பிரான்சின் Naval Group உடன் இணைந்து தயாரிக்கப்படுகிறது.மும்பையில் உள்ள மசகான் டாக் லிமிடெட் (MDL) நிறுவனமும் இதில் பங்கெடுக்கிறது.ஸ்கார்பின் வகை நீர்மூழ்கிக் கப்பல்கள் ஏற்கனவே இந்திய கடற்படையில் உள்ளன. புதிய ஒப்பந்தத்தின் மூலம் கூடுதல் யூனிட்கள் தயாரிக்கப்படுகின்றன.
இவை நவீன டார்பிடோ, க்ரூஸ் ஏவுகணை, நீண்டநேரம் நீரில் இயங்கும் AIP (Air Independent Propulsion) போன்ற மேம்பட்ட தொழில்நுட்பங்களைக் கொண்டிருக்கும்.
ஜெர்மனியின் ThyssenKrupp Marine Systems (TKMS) நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்படுகிறது.எதிரி ரேடாரில் சிக்காமல் இயங்கும் ஸ்டெல்த் தொழில்நுட்பம் கொண்டிருக்கும்.இந்திய கடற்படைக்கு ஆழ்கடலில் நீண்டநேரம் மறைந்து செயல்படும் திறன் வழங்கும்.
இந்தியா தற்போது சுமார் 16 நீர்மூழ்கிக் கப்பல்களை வைத்திருக்கிறது. ஆனால் சீனாவிடம் 60-க்கும் மேற்பட்ட நீர்மூழ்கிகள் உள்ளன. இந்த வித்தியாசத்தை குறைப்பதற்கும், கடல் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் புதிய ஒப்பந்தங்கள் உதவும்.
"Make in India" திட்டத்தின் கீழ் உள்ளூரில் உற்பத்தி மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றம் நடைமுறைக்கு வரும். இதனால் இந்திய பொறியாளர்களுக்கு மேம்பட்ட நீர்மூழ்கி தொழில்நுட்பத்தில் அனுபவம் கிடைக்கும்.
இந்தியப் பெருங்கடல் பகுதியில் கடற்படையின் முழுமையான கண்காணிப்பு மற்றும் தடுப்பு திறன் அதிகரிக்கும்.
மொத்தத்தில், இந்த இரண்டு பெரிய ஒப்பந்தங்களும் நிறைவேற்றப்பட்டால், இந்தியா தனது நீர்மூழ்கிக் கப்பல் படையை உலக தரத்தில் கொண்டு செல்லும் முன்னேற்றத்தை அடையும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.