திருவண்ணாமலை உள்ள மலைக் கோவில்களில் பவுர்ணமி நாளில் மலையை வலம் வந்து கிரிவல வழிபாடு செய்வது பக்தர்கள் பலரின் வழக்கமாக உள்ளது. அப்படி திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்பவர்கள் சந்திர கிரகணம் செல்லும் நேரத்தில் கிரிவல வழிபாட்டினை மேற்கொள்ளலாமா? கூடாதா
சந்திர கிரகணம் செப்டம்பர் 07ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நிகழ உள்ளது. இது மார்ச் மாதம் நடந்த சந்திர கிரகணம் போல் இல்லாமல் முழுமையான சந்திர கிரகணமாக நிகழ உள்ளது. செப்டம்பர் 07ம் தேதியன்று இரவு 09.56 மணிக்கு துவங்கி, நள்ளிரவு 01. 26 வரை சந்திர கிரகணம் நிகழ உள்ளது. முழு சந்திர கிரகணம் இரவு 10.59 மணிக்கு துவங்குவதாக சொல்லப்படுகிறது. பொதுவாகவே சந்திர கிரகம் என்பது பவுர்ணமி நாளில் தான் நிகழும். இந்த முறை ஆவணி பவுர்ணமி நாளில் சந்திர கிரகணம் நிகழ உள்ளது.
செப்டம்பர் 07ம் தேதியன்று அதிகாலை 01.49 மணிக்கு துவங்கி, செப்டம்பர் 08ம் தேதி அதிகாலை 12.32 மணி வரை பெளர்ணமி திதி உள்ளது. செப்டம்பர் 07ம் தேதியன்று அதிகாலை 01.41 மணிக்கு துவங்கி, செப்டம்பர் 08ம் தேதி இரவு 11.38 மணி வரை கிரிவலம் செல்லலாம் என கிரிவலம் செல்வதற்கான நேரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகமானவர்கள் இரவு நேரத்திலேயே திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் வருவதை வழக்கமாக வைத்துள்ளார்கள். ஆனால் கிரகண நேரத்தில் கிரிவலம் செல்லக் கூடாது. அப்படி செல்வதால் எந்த பலனும் கிடைக்காது என சொல்லப்படுகிறது. கிரிவலம் என்பது மிக உன்னதமான வழிபாடாகும். அதனால் பவுர்ணமி கிரிவலம் செல்பவர்கள் கிரகணம் துவங்குவதற்கு முன்பாகவோ அல்லது கிரகணம் முடிந்த பிறகு குளித்து விட்டு, சுத்தமாக கிரிவல வழிபாட்டினை மேற்கொள்ள வேண்டும் என சொல்லப்படுகிறது.
அதோடு ஆலய வழிபாட்டு சாஸ்திர முறைப்படி, கோவில் நடை சாத்தப்பட்டிருக்கும் சமயத்தில் கோவிலை வலம் வரக் கூடாது என்பது நியதி. கிரகணம் சமயத்தில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலிலும் நடை சாத்தப்பட்டிருக்கும். அந்த சமயத்தில் கிரிவலம் வருவது சாஸ்திர முறைகளுக்கு எதிரானதாகும்.
செப்டம்பர் 08ம் தேதி இரவு 11.38 வரை கிரிவலம் செல்லலாம் என்பதால், செப்டம்பர் 07ம் தேதி இரவு சந்திர கிரகணம் முடிந்த பிறகு குளித்து விட்டு, அதற்கு பிறகு கிரிவலத்தை துவங்கி, இரவு 11.30 மணிக்குள்ளாக நிறைவு செய்யலாம்.