குஷியோ குஷி…! “தகுதியுள்ள பெண்களுக்கு நிச்சயம் உரிமைத் தொகை” – உதயநிதி ஸ்டாலின் உறுதி!
SeithiSolai Tamil September 08, 2025 06:48 AM

தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், “உங்களுடன் ஸ்டாலின்” முகாமில் விண்ணப்பித்த தகுதியுள்ள அனைத்து பெண்களுக்கும் நிச்சயமாக மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என உறுதி அளித்தார்.

திருமண நிகழ்ச்சியில் பேசிய அவர், தற்போது 1 கோடியே 20 லட்சம் பெண்கள் மகளிர் உரிமைத் தொகையைப் பெறுகின்றனர் என்றும், எதிர்காலத்தில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும், பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு திருமண உதவித்தொகையையும் வழங்கிய உதயநிதி, “பெண்களின் உரிமைகள் மற்றும் சமூக முன்னேற்றத்திற்காக அரசு தொடர்ந்து செயல்படும். தகுதியுள்ள பெண்கள் யாரும் புறக்கணிக்கப்படமாட்டார்கள்” என கூறினார். இதன் மூலம் மகளிர் உரிமைத் திட்டம் உறுதியான முறையில் தொடரும் என்பதில் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.