லாட்ஜில் ரூம் போட்ட காதலர்கள்... வெளியே தாழிட்டு சென்ற காதலனுக்கு அதிர்ச்சி... 2 பேரும் உயிரிழந்த கொடூரம்!
Dinamaalai September 10, 2025 02:48 PM

சென்னையில் காதலர்கள் லாட்ஜ் ஒன்றில் ரூம் போட்டிருந்த நிலையில், காதலர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இவர்களது காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரிந்த நிலையில், இருவருக்கும் இடையேயான தகராறில் காதலி லாட்ஜ் அறையில் தூக்கிட்டு தற்கொலைச் செய்துக் கொண்டார். இதில் பதற்றமடைந்த காதலனும் பயத்தில் வீட்டிற்குச் சென்று தற்கொலைச் செய்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை அண்ணாநகர் மேல் நடுவங்கரை பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர் காளிதாஸ். இவரது மகள் திரிஷா(20). இவரும் சென்னை செங்குன்றத்தைச் சேர்ந்த ராபின்(22) எனும் இளைஞரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் இருவரும் நேற்று வேப்பேரி காவல் நிலையம் பின்புறம் டவுட்டன் மேம்பாலம் அருகில் பூங்காவை ஒட்டியிருக்கும் லாட்ஜில் அறை எடுத்து தங்கி உள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதில் லாட்ஜில் இருந்த ராபின் கோபமாக வெளியேறி உள்ளார். அப்போது அறையின் கதவை வெளிப்பக்கமாக பூட்டி விட்டு சென்றுள்ளார்.

காதலன் தன்னைத் தவிக்க விட்டு விட்டு சென்றதால் மன உளைச்சலுக்குள்ளான த்ரிஷா, அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சிறிது நேரம் கழித்து லாட்ஜுக்கு வந்த ராபின் அறையின் கதவை நிறந்து பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து திரிஷாவின் தோழி ஒருவருக்கு போன் செய்து நானும் திரிஷாவும் வேப்பேரியில் உள்ள லாட்ஜில் அறை எடுத்து தங்கினோம். அவர் லாட்ஜில் தற்கொலை செய்து கொண்டார் என கூறி லாட்ஜி பெயர், அறை எண் ஆகியவற்றையும் தெரிவித்துள்ளார். நானும் எனது வீட்டுக்கு சென்று தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன் என கூறி விட்டு போனை துண்டித்து விட்டார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த தோழி உடனடியாக திரிஷாவின் பெற்றோருக்கு இது குறித்து தகவல் தெரிவித்தார்.

அவர்கள் லாட்ஜுக்குப் போன் செய்து திரிஷா தங்கியிருந்த அறை எண்ணை குறிப்பிட்டு அங்கு சென்று பார்க்குமாறு அறிவுறுத்தி உள்ளனர். லாட்ஜு ஊழியர்கள் சென்று, வெளிப்பக்கமாக பூட்டப்பட்டிருந்த கதவை மாற்று சாவி மூலமாக திறந்து உள்ளே சென்ற போது, அங்கு திரிஷா தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.

இது குறித்து தகவல் கிடைத்ததும் வேப்பேரி குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வகுமார் விரைத்து சென்றுதிரிஷா உடலை கைப்பற்றி ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்,இதற்கிடையே காதலன்ராபினும் செங்குன்றம் எடப்பாளையத்தில் உள்ள தனது வீட்டுக்கு சென்று தூக்குப்போட்டு, தற்கொலை செய்து கொண்டி ருப்பது தெரியவந்தது.இருவருக்கும் இடையேயான காதல் விவகாரம் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இரு வீட்டாருக்குள் தெரிய வந்துள்ளது.இதைத்தொடாந்து இருவருக்கும் திருமணம் செய்து வைக்கலாம் என இரண்டு பெற்றோர்களும் முடிவு செய்து இருந்தனர்.

இதற்காக எடப்பாளையத்தில் உள்ள ராபின் வீட்டுக்குச் சென்று திரிஷாவின் பெற்றோர் பேசிவிட்டும் வந்துள்ளார்கள். திருமணம் தொடர்பாக விரைவில் பேசி முடிவு செய்து கொள்ள இருவீட்டாரும் திட்டமிட்டிருந்தனர். இப்படி திரிஷாவின் காதலுக்கு பெற்றோர் பச்சைக் கொடி காட்டிய நிலையில்தான காதல் ஜோடி லாட்ஜில் அறை எடுத்து தங்கி உயிரை மாய்த்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ராபினின் காதலி திரிஷா தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்ட அறையை வெளிப்பக்கமாக பூட்டி சாவியை ராபின் எடுத்து சென்றுள்ளார். இதன்மூலம் திரிஷாவை தூக்கில் ராபின் கொலை செய்து தொங்க விட்டிருக்கலாமோ என்கிற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது.இது தொடர்பாகவும் போலீஸ் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலிசாரிடம் கேட்டபோது, இருவரும் இதுவரையில் தற்கொலை செய்திருப்பதற்கான அடையாளங்களே காணப்படுகின்றன என்று தெரிவித்தனர்.

இருப்பினும் திரிஷாவின் பிரேத பரிசோதனை அறிக்க வந்த பிறகு தான் அவரது மரணம் தொடர்பான முழு விவரமும் வெளிச்சத்துக்கு வரும் என்றும் கூறினார்கள்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.