வரதட்சணை கேட்டு மருமகளை கொடுமைப்படுத்தியதாக பிரபல கன்னட திரைப்பட இயக்குனர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்த புகாரின் பேரில் பிரபல கன்னட திரைப்பட இயக்குனர் எஸ்.நாராயணை விசாரணைக்கு ஆஜராக போலீசார் நோட்டீஸ் அனுப்பி வைத்துள்ளனர்.கன்னட திரையுலகின் பிரபல இயக்குனரான எஸ்.நாராயணின் பெங்களூரு ஞானபாரதி அருகே குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடந்த 2021ம் ஆண்டு இவரது 2வது மகன் பவனுக்கும், பவித்ரா எனும் பெண்ணுக்கும் திருமணம் நடந்தது. கணவன், மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக தற்போது பவனை பிரிந்து பவித்ரா தனியே வசித்து வருகிறார்.
இந்நிலையில் காவல் நிலையத்தில் தனது கணவர், மாமனார், மாமியார் தன்னை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக பவித்ரா புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் எனக்கும், பவனுக்கும் 2021ம் ஆண்டு காதல் திருமணம் நடந்திருந்தது. திருமணமான 3 மாதங்களிலேயே மாமனார், மாமியார் என்னை வரதட்சணைக் கேட்டு கொடுமைப்படுத்தினார்கள்.அதனால் 2022ல் நானும், கணவரும் தனி குடித்தனம் சென்று விட்டோம். திருமணத்தின் போது ரூ.1 லட்சம் கொடுத்ததுடன் திருமணத்திற்கான செலவை எனது பெற்றோரே ஏற்றுக் கொண்டனர். எனது கணவர் வேலைக்கு செல்லாமல் இருந்தார். நான் தான் வேலைக்கு சென்று குடும்பத்தை நடத்தினேன்.
கணவர் கார் வாங்க எனது பெற்றோர் ரூ.1 லட்சம் கொடுத்தனர். எனது தாயிடம் தனியாக கணவர் ரூ.75 ஆயிரத்தை வாங்கினார். தற்போது என்னிடம் வரதட்சணை கேட்டு கணவரும், கணவர் குடும்பத்தினரும் கொடுமைப்படுத்துகிறார்கள்.தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் ரூ.10 லட்சத்தை கடனாக கொடுத்திருந்தோம். அந்த கடனை திருப்பி கொடுக்கவில்லை. இது குறித்து கேட்டதால் என்னைதாக்கி வீட்டை விட்டு வெளியே அனுப்பி விட்டனர். எனவே அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.இந்த புகாரின் பேரில், எஸ்.நாராயண், பாக்யவதி, பவன் ஆகிய 3 பேர் மீதும் வழக்குப்பதிவாகி உள்ளது.மேலும் எஸ்.நாராயண் உள்பட 3 பேரையும் விசாரணைக்கு ஆஜராகும்படி போலீசார் நோட்டீஸ் அனுப்பி வைத்துள்ளனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?