உஷார்.. அடுத்த 3 மணி நேரத்தில் 16 மாவட்டங்களில் மழை... சென்னையிலும் மழை தொடரும்!
Dinamaalai October 17, 2025 02:48 PM

சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் நேற்று இரவு தொடங்கி தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனிடையே அடுத்த 3 மணி நேரத்திற்குள் தமிழகத்தின் 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

கடலோர பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி மற்றும் தென்கிழக்கு அரபிக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு காரணமாக, மாநிலம் முழுவதும் மழைச் சூழல் நீடித்து வருகிறது. இன்று (அக்.17) தமிழகத்தின் பல இடங்களில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும் மதுரை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், நீலகிரி, கோயம்புத்தூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களிலும் கனமழை பெய்யலாம்.

அடுத்த 3 மணி நேரத்திற்குள் மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்களாக செங்கல்பட்டு, சென்னை, கடலூர், காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, தஞ்சாவூர், திருவள்ளூர், திருவாரூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் மற்றும் புதுச்சேரி–காரைக்கால் பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இதே நேரத்தில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நுங்கம்பாக்கம், கோயம்பேடு, மதுரவாயல், வேளச்சேரி, சைதாப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் நேற்று இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.