என் “Birthday Party”-க்கு வா…. 17 வயது சிறுமியை நம்ப வைத்து…. 20 வயது மணி செய்த கொடூரம்…. ஹோட்டல் அறையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்….!!
SeithiSolai Tamil October 18, 2025 02:48 PM

சென்னை பெரம்பூர் சபாபதி தெருவைச் சேர்ந்த 20 வயது மணி, வியாசர்பாடியில் உள்ள ஒரு கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த அக்டோபர் 6-ம் தேதி அவரது பிறந்தநாள் அன்று, தனக்கு தெரிந்த 17 வயது கல்லூரி மாணவியை பிறந்தநாள் விருந்துக்கு அழைப்பதாகக் கூறி, கொளத்தூர் அருகே உள்ள ரெட்டேரி பகுதிக்கு அழைத்துச் சென்றார். அங்கு ஒரு விடுதியில் அறை எடுத்து தங்கிய மணி, அந்த மாணவியை மது குடிக்க வற்புறுத்தியதாகவும், பின்னர் அவரை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து மாணவியின் பெற்றோர் செம்பியம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து, காவல்துறையினர் மணி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை தொடங்கியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, மேலும் காவல்துறை இந்த வழக்கை தீவிரமாக விசாரித்து வருகிறது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.