அநியாயம் பண்றீங்களே..! “டிக்கெட் இல்லாமல் ரயில் பயணம்”… டிக்கெட் பரிசோதகரின் சட்டையை கிழித்து பெண்கள் அட்டூழியம்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!
SeithiSolai Tamil October 18, 2025 02:48 PM

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள சார்பாக் ரயில் நிலையத்தில், வியாழன் இரவு (அக்டோபர் 16) டூன் எக்ஸ்பிரஸ் ரயிலில் டிக்கெட் இல்லாமல் பயணித்த பெண்கள், ரயில் டிக்கெட் பரிசோதகர் (TTE) திவாகர் மிஸ்ராவைத் தாக்கிய சம்பவம் நடந்தது. மாலை 9 மணியளவில், ரயில் பிளாட்ஃபார்ம் 5-ல் நின்றிருந்தபோது, சில பயணிகள், முன்பதிவு செய்யப்பட்ட இருக்கைகளை டிக்கெட் இல்லாதவர்கள் ஆக்கிரமித்ததாக புகார் செய்தனர். இதையடுத்து, TTE மிஸ்ரா அந்த பெண்களிடம் டிக்கெட்டைக் கேட்டு, இருக்கைகளை காலி செய்யுமாறு கூறினார்.

ஆனால், அந்த பெண்கள் ஒத்துழைக்க மறுத்து, வாக்குவாதம் செய்தனர். இது விரைவில் வன்முறையாக மாறியது. அவர்கள் மிஸ்ராவின் சட்டையைப் பிடித்து, ஒருவர் அவரது முகத்தில் சூடான டீயை ஊற்றினர், இதனால் அவரது முகம் மற்றும் கழுத்தில் தீக்காயங்கள் ஏற்பட்டன. மோதலில் அவரது சட்டை கிழிந்து, தங்கச் சங்கிலியும் கழன்று விழுந்தது. பயணிகள் தலையிட்டு நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். ரயில்வே காவல்துறை (GRP) மற்றும் RPF விரைந்து வந்து, மிஸ்ராவின் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்தனர். CCTV காட்சிகளை ஆய்வு செய்து, குற்றவாளிகளை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.