பஞ்சாங்கம் அக்.18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்! Dhinasari Tamil %name%
ஸ்ரீராமஜயம் – ஸ்ரீராம் ஜயராம் ஜயஜய ராம்
||श्री:|| !!ஸ்ரீ:!!
श्री:
श्री मते रामानुजाय नम:
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
ஐப்பசி~ 1 ( 18.10.2025* ) சனிக்கிழமை*
வருடம் ~ விச்வாவஸு {விச்வாவஸு நாம சம்வத்ஸரம்}
அயனம் ~ தக்ஷிணாயனம்
ருது ~ *** சரத் ருது.
மாதம் ~ * ஐப்பசி மாதம் { துலா மாஸம்}
பக்ஷம் ~ க்ருஷ்ண பக்ஷம்.
திதி ~ 2.28 pm வரை த்வாதசி பின் த்ரயோதசி
நாள் ~ {ஸ்திர வாஸரம்} சனிக்கிழமை.
நக்ஷத்திரம் ~ 6 22 pm வரை பூரம் பின் உத்திரம்
யோகம் ~ ப்ராம்யம்
கரணம்~ தேதுளை
அமிர்தாதியோகம் ~ சுபயோகம்
ராகு காலம் ~ காலை 9.00 ~ 10.30.
எமகண்டம் ~ மதியம் 1.30 ~ 3.00.
குளிகை ~ காலை 6.00 ~ 7.30.
நல்ல நேரம் ~ 7 to 8 am and 11 to 12 pm
சூரிய உதயம் ~ காலை 6.06
சந்திராஷ்டமம் ~ மகரம்
சூலம் ~ கிழக்கு.
பரிகாரம் ~ தயிர்
ஸ்ராத்த திதி ~ த்வாதசி
இன்று ~ துலா ஸ்னானம் ஆரம்பம், ப்ரதோஷம்
स्वस्तिप्रजाभ्यः परिपालयंतां, न्यायेन मार्गेण महीं महीशाः ।
गोब्राह्मणेभ्यः शुभमस्तु नित्यं, लोकाः समस्ताः सुखिनोभवंतु !!
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः !!
!!धर्मो रक्षति रक्षित:!!
!!लोकः समस्ताः सुखिनो भवन्तु!!
!!ॐ सर्वे भवन्तु सुखिनः। सर्वे सन्तु निरामयाः। सर्वे भद्राणि पश्यन्तु। मा कश्चित् दुःख भाग्भवेत्!!
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः!!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.
ஓரை என்றால் என்ன?
ஓரை என்பதற்கு ஆதிக்கம் எனப் பொருள்.
ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு கிரகத்தின் ஆதிக்கம் மிகுந்து காணப்படும்.
சனிக்கிழமை ஹோரை
காலை
6-7 : சனி – அசுபம்
7-8 : குரு – சுபம்
8-9: செவ்வாய் – அசுபம்
9-10: சூரியன் – அசுபம்
10-11 : சுக்கிரன் – சுபம்
11-12 : புதன் – சுபம்
பிற்பகல்
12-1 : சந்திரன் – சுபம்
1-2 : சனி – அசுபம்
2-3 : குரு – சுபம்
மாலை
3-4: செவ்வாய் – அசுபம்
4-5 : சூரியன் – அசுபம்
5-6 : சுக்கிரன் – சுபம்
6-7 : புதன் – சுபம்
நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை, புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அருமருந்தாக அமையும்..
இன்றைய (18-10-2025) ராசி பலன்கள்
மேஷம்ஆன்மீக பணிகளில் தெளிவுகள் ஏற்படும். கலைத்துறையில் செல்வாக்கு மேம்படும். சேமிப்பு சார்ந்த எண்ணம் மேலோங்கும். சமூக பணிகளில் சில மாற்றமான சூழல் ஏற்படும். உடன் பிறப்புகள் சாதகமாக இருப்பார்கள். புதுமையான விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். தொழில் வளர்ச்சிக்கு நண்பர்களின் உதவி கிடைக்கும். உத்தியோக பணிகளில் கவனத்துடன் செயல்படவும். போட்டி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
அஸ்வினி : தெளிவுகள் ஏற்படும்.
பரணி : மாற்றமான நாள்.
கிருத்திகை : கவனத்துடன் செயல்படவும்.
பிரமுகர்களின் சந்திப்புகள் ஏற்படும். புதிய வேலை சார்ந்த எண்ணங்கள் உண்டாகும். தள்ளிப்போன சில காரியங்கள் கைக்கூடி வரும். கடன் பற்றிய சிந்தனைகள் ஏற்படும். அதிரடி மாற்றங்களால் லாபத்தை மேம்படுத்துவீர்கள். ஆரோக்கியத்தில் இருந்த மந்தத்தன்மை விலகும். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
கிருத்திகை : சந்திப்புகள் ஏற்படும்.
ரோகிணி : லாபம் மேம்படும்.
மிருகசீரிஷம் : ஆதரவான நாள்.
சொத்து பிரச்சனைகளுக்கு தீர்வுகள் கிடைக்கும். பிரபலமானவர்களின் ஒத்துழைப்புகள் ஏற்படும். தனிப்பட்ட முறையில் சில முடிவுகளை எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். நிலுவை சரக்குகளால் ஆதாயம் உண்டாகும். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். செய்யும் முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உதவி கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
மிருகசீரிஷம் : தீர்வுகள் கிடைக்கும்.
திருவாதிரை : ஆதரவான நாள்.
புனர்பூசம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
நிகழ்கால தேவைகள் பூர்த்தியாகும். எதிர்க்கருத்து கூறியவர்கள் மனம் மாறுவார்கள். கூட்டு முயற்சியில் வெற்றி கிடைக்கும். குடும்ப பிரச்சனைகள் விலகும். விலகி சென்றவர்கள் விரும்பி வருவார்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் நிலவும். புதியவர்கள் நட்பால் நன்மை ஏற்படும். அலுவலகத்தில் முக்கிய பொறுப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் வரவுகள் மேம்படும். நலம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிகப்பு நிறம்
புனர்பூசம் : தேவைகள் பூர்த்தியாகும்.
பூசம் : பிரச்சனைகள் விலகும்.
ஆயில்யம் : வரவுகள் மேம்படும்.
தம்பதிகளுக்குள் மனம் விட்டு பேசுவது புரிதலை ஏற்படுத்தும். ஜாமின் விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். வியாபார பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். அலுவலகத்தில் விவேகத்துடன் செயல்படவும். புதிய விஷயங்களை திட்டமிட்டு செயல்படுத்துவது நல்லது. சிறு சிறு சஞ்சலமான பேச்சுக்கள் ஏற்பட்டு நீங்கும். ஆரோக்கியம் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
மகம் : சிந்தித்து செயல்படவும்.
பூரம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
உத்திரம் : சஞ்சலமான நாள்.
திட்டமிட்ட பணிகளில் அலைச்சல்கள் ஏற்படும். வாகன பயணங்களில் நிதானம் வேண்டும். வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்கவும். திடீர் செலவுகளால் கையிருப்புகள் குறையும். புதிய முதலீடுகளில் சிந்தித்து செயல்படவும். உயர் அதிகாரிகள் இடத்தில் சிறுசிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். ஊக்கம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
உத்திரம் : அலைச்சல்கள் ஏற்படும்.
அஸ்தம் : கையிருப்புகள் குறையும்.
சித்திரை : வாதங்கள் நீங்கும்.
சுப காரியம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். ஆரோக்கியத்தில் இருந்த இன்னல்கள் குறையும். பயனற்ற செலவுகளை தவிர்ப்பது நல்லது. குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை நிறைவேற்றுவீர்கள். வியாபார அபிவிருத்திக்கான வாய்ப்புகள் உருவாகும். உத்தியோகத்தில் பாராட்டுக்கள் கிடைக்கும். பிரீதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீல நிறம்.
சித்திரை : முயற்சிகள் கைகூடும்.
சுவாதி : செலவுகளில் கவனம்.
விசாகம் : பாராட்டுக்கள் கிடைக்கும்.
குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். வெளிவட்டார பழக்கங்கள் அதிகரிக்கும். கிடைக்கும் சிறு வாய்ப்புகளும் பயனுள்ளதாக இருக்கும். உங்கள் மீதான நம்பிக்கை மேம்படும். அரசு சார்ந்த உதவிகள் கிடைக்கும். கல்வியில் இருந்த குழப்பம் விலகும். வியாபாரம் சிறப்பான வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோக பணிகளில் சில மாற்றம் ஏற்படும். சுபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
விசாகம் : ஒற்றுமை பிறக்கும்.
அனுஷம் : நம்பிக்கை மேம்படும்.
கேட்டை : மாற்றம் ஏற்படும்.
மனதளவில் புதிய தெளிவுகள் உண்டாகும். குடும்பத்தில் அனுசரித்து செல்லவும். தடைப்பட்ட சில பணிகளை முடிப்பீர்கள். விலகி சென்றவர்கள் விரும்பி வருவார்கள். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் திடீர் திருப்பங்கள் ஏற்படும். சேமிப்புகள் மூலம் ஆதாயமான சூழல் ஏற்படும். முயற்சி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
மூலம் : தெளிவுகள் உண்டாகும்.
பூராடம் : ஆதரவான நாள்.
உத்திராடம் : ஆதாயமான நாள்.
புதிய தொடர்புகளில் கவனம் வேண்டும். பொருளாதாரத்தில் சில பின்னடைவுகள் ஏற்பட்டு நீங்கும். விலை உயர்ந்த பொருள்களில் விழிப்புணர்வு வேண்டும். உடலில் ஒருவிதமான சோர்வுகள் தோன்றி மறையும். பயனற்ற பேச்சுக்களை குறைத்து கொள்ளவும். உத்தியோகத்தில் பொறுப்புகள் மேம்படும். வியாபார வரவுகளில் தாமதம் உண்டாகும். நிதானம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
உத்திராடம் : கவனம் வேண்டும்.
திருவோணம் : விழிப்புணர்வு வேண்டும்.
அவிட்டம் : தாமதம் உண்டாகும்.
குழந்தைகள் உங்கள் குணம் அறிந்து செயல்படுவார்கள். வியாபாரத்தில் லாபம் மேம்படும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். நண்பர்களின் வட்டம் விரிவடையும். எதிர்பாராத சில வரவுகள் கிடைக்கும். உயர் அதிகாரிகள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். முயற்சிக்கு ஏற்ற முன்னேற்றம் உண்டாகும். சுபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிவப்பு நிறம்
அவிட்டம் : லாபம் மேம்படும்.
சதயம் : வரவுகள் கிடைக்கும்.
பூரட்டாதி : முன்னேற்றம் உண்டாகும்.
குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். செயல்பாடுகளில் சில மாற்றங்கள் ஏற்படும். வியாபாரத்தில் லாபகரமான சூழல் உண்டாகும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நெருக்கடியான சில விஷயங்கள் குறையும். பழக்க வழக்கங்கள் மூலம் மேன்மை அடைவீர்கள். தனம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்
பூரட்டாதி : மாற்றங்கள் ஏற்படும்.
உத்திரட்டாதி : வாய்ப்புகள் கிடைக்கும்.
ரேவதி : மேன்மையான நாள்.
அதிகாரம்: செய்ந்நன்றி அறிதல் – குறள் எண்: 101
செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது.
மு.வ உரை: தான் ஓர் உதவியும் முன் செய்யாதிருக்கப் பிறன் தனக்கு செய்த உதவிக்கு மண்ணுலகத்தையும் விண்ணுலகத்தையும் கைமாறாகக் கொடுத்தாலும் ஈடு ஆக முடியாது.
தினம் ஒரு திருமுறைமறை – 1. பதிகம் – 44 பாடல் – 10
நாணொடுகூடிய சாயினரேனு நகுவ ரவரிருபோதும்
ஊணொடுகூடிய வுட்குநகையா லுரைக ளவைகொளவேண்டா
ஆணொடுபெண்வடி வாயினர்பாச்சி லாச்சிரா மத்துறைகின்ற
பூணெடுமார்பரோ பூங்கொடிவாடப் புனைசெய்வதோ விவர்பொற்பே.
விளக்கவுரை :நாணத்தொடு கூடிய செயல்களை இழந்து ஆடையின்றித் திரிதலால் எல்லோராலும் பரிகசிக்கத் தக்கவராகிய சமணரும், இருபொழுதும் உண்டு அஞ்சத்தக்க நகையோடு திரியும் புத்தரும், ஆகிய புறச்சமயத்தவர் உரைகளை மெய்யெனக் கொள்ளவேண்டா. அன்பர்கள் வழிபடும் திருப்பாச்சிலாச்சிராமத்தில் மாதொருபாகராய் அணிகலன்கள் பூண்ட திருமார்பினராய் விளங்கும் இறைவர் இப்பூங்கொடியாளை வாடச்செய்து பழிப்புரை கொள்ளல் இவரது அழகுக்கு ஏற்ற செயலா?
தினம் ஒரு பாசுரம்நாலாயிர திவ்யப் பிரபந்தம்
” ஆலினிலைப் பாலகனாய் அன்று உலகமுண்டவனே!, வாலியைக் கொன்று அரசு இளையவானருத்துக்கு அளித்தவனே!, காலின்மணி கரையலைக்கும் கணபுரத்து என் கருமணியே!, ஆலிநகர்க்கு அதிபதியே! அயோத்திமனே! தாலேலோ”
இன்றைய சிந்தனை!
முதல் படி
உன்னால் முடியும் என்று எண்ணுவதையோ அல்லது முடியும் என்று கனவு காண்பதையோ துணிந்து தொடங்கு. உனது துணிவிலேயே அறிவும், ஆற்றலும், மந்திரமும் அடங்கியுள்ளன.
நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.
உழைப்பு = வெற்றி
மாபெரும் லட்சியத்தையும் வெற்றியில் நம்பிக்கையையும் வாழ்க்கையில் ஏற்றுக்கொண்டால், யாரும் உயர்ந்த நிலையை அடைய முடியும்! – அம்பேத்கர்
வாழ்க்கையில் நீங்கள் வெற்றி பெற மூன்று வழிகள்
தினசரி.காம்
இன்றைய சிந்தனைக்கு…பொறுப்பு என்பது, பாரம் அல்ல, வாய்ப்பு, ஒருவரின், திறமையை நிரூபிப்பதற்கான, சந்தர்ப்பம்!
முடியாது என்பதை பிறகு சிந்தி, எப்படி முடிப்பது என்பதை, எப்பொழுதும் சிந்தி, வெற்றி நிச்சயம்!!
ஒருவருக்கு கிடைத்ததைப் பற்றி, பேசும் இந்த சமூகம், அதனை அடைய, அவர் இழந்ததைப் பற்றி, பேசுவதில்லை!!!
உன் வார்த்தைகளின் நாகரீகமே, பிறரிடம், உனக்கான நன்மதிப்பை, பெற்று கொடுக்கும்!
நீ வாழ்க்கையில் முன்னேற வேண்டுமானால், உன்னுடைய கால்களை பயன்படுத்து, பிறரின் முதுகை அல்ல!!
உன்னை எப்படி நினைக்கிறாயோ, மத்தவங்களையும் அப்படியே நினைக்க கத்துக்கோ; உன் எண்ணம் உறுதியா இருந்தா, நீ எண்ணியபடி உயர்ந்திடுவாய்!!!
பஞ்சாங்கம் அக்.18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்! News First Appeared in Dhinasari Tamil