ரொம்ப நாளா ஒற்றைத் தலைவலியால அவதிப்படறீங்களா?
Top Tamil News October 27, 2025 07:48 PM

தலைவலியிலேயே பல வகைகள் உண்டு. அதில் ஒற்றைத் தலைவலி தான் இருப்பதிலேயே சிரமமான ஒன்று. எந்த வேலையுமே செய்ய முடியாது. அப்படிப்பட்ட கொடுமையான ஒற்றைத் தலைவலிக்கு தான் வீட்டிலேயே செய்யக்கூடிய ஒரு சூப்பர் பானம் ஒன்றைப் பார்க்கப் போகிறோம்.

பொதுவாக தலைவலி வரும்போது நெற்றி மற்றும் நெற்றிப் பொட்டு என முழுமையாக வலி இருக்கும். ஆனால் ஒற்றைத் தலைவலி என்பது அப்படியல்ல.

நெற்றியின் பாதியில் இருந்து ஒருபக்கத்தில் மட்டும் வலிக்கும். அது அப்படியு காதுக்குப் பின்னால் கழுத்தின் பின்பக்கம் வரைக்கும் வலி இருக்கும். வலியைப் பொறுத்துக் கொள்ளவே முடியாது.

நீண்ட நேரம் வரைக்கும் இந்த வலி இருக்கும். சில சமயங்களில் ஒரு நாளைத் தாண்டி இரண்டு நாள் வரைக்கும் கூட வலி இருக்கும்.

மற்ற தலைவலி என்றால் அந்த பகுதியில் தான் வலி இருக்கும். நெற்றி மட்டும் தலையில் வெடுக் வெடுக்கென்று கரண்ட் ஷாக் அடிப்பது போல இழுக்கும்.
சின்னதாக ஏதாவது சத்தம் கேட்பது போல இருந்தால் கூட எரிச்சல் உணர்வு அதிகமாக இருக்கும்.சிலருக்கு ஒற்றைத் தலைவலி வந்து விட்டாலே குமட்டல் மற்றும் வாந்தி உள்ளிட்ட உணவுகளும் இருக்கும்.குறைந்தது ஒரு நாள் முதல் இரண்டு நாள் வரைக்கும் இந்த வலி இருக்கும்.

ஒற்றைத் தலைவலியை குறைக்க உதவும் பானம்

தேவையான பொருள்கள்

இஞ்சி - 1 இன்ச் அளவு,
மிளகு - 10,
எலுமிச்சை பழம் - 1,
மஞ்சள் - அரை ஸ்பூன்,
தண்ணீர் - 300 மில்லி,

இந்த எளிமையான வீட்டில் இருக்கும் பொருள்களை மட்டும் வைத்தே ஒற்றைத் தலைவலியைக் குறைக்கலாம். தொடர்ந்து எடுத்துக் கொண்டு வந்தால் ஆரம்பத்தில் வருவதற்கு முன்பே கட்டுப்படுத்தலாம்.


இந்த பானம் குடிப்பதன் நன்மைகள்

இந்த எளிமையான பானத்தைத் தயார் செய்து குடிப்பதன் மூலம் ஒற்றைத் தலைவலி மட்டுமல்ல, நிறைய ஆரோக்கிய நன்மைகள் இருக்கின்றன.இது ஜீரண ஆற்றலை அதிகரிக்கச் செய்கிறது. உடலின் ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது.இதில சேர்க்கப்படும் மஞ்சளில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டை அதிகரிக்கச் செய்கிறது.மிளகில் உள்ள பைபரின் மற்றும் எலுமிச்சை பழத்தில் உள்ள வைட்டமின் சி ஆகியவை கல்லீரல் கழிவுகளைச் சுத்தம் செய்யும்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.