பஞ்சாங்கம் – அக்.29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்! Dhinasari Tamil %name%
astrology panchangam rasipalan dhinasari 3
இன்றைய பஞ்சாங்கம் அக்.29
||श्री:||
ஸ்ரீ ராமஜெயம்
பஞ்சாங்கம் | 29.10.2025 | புதன்கிழமை
!!ஸ்ரீ:!!
!!ஸ்ரீராமஜயம்!!
श्री:श्री मते रामानुजाय नम:
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
பஞ்சாங்கம்
29.10.2025 புதன்கிழமை- ஶௌம்யவாஶரம்
வருஷம்~வருஷம் விஶ்வாவஶு/ விஶ்வாஶ்வ நாமஸம்வத்ஶரம்
அயனம்~ தக்ஷிணாயனம்
ருது~ஶரத்ருது
மாதம்/தேதி~ ஐப்பஶி௴~ துலா௴12
பக்ஷம்~ ஶுக்லபக்ஷம்
திதி~ அஷ்டமி மறுநாள் காலை 05.37 வரை பிறகு நவமி
ஶ்ரார்ததிதி-அஷ்டமி
நக்ஷத்திரம்~ உத்திராடம் மதியம் 02.21 வரை பிறகு திருவோணம்
யோகம்~ ஶித்த/அமிர்தயோகம்
யோகம்~ஶுலம்
கரணம்~பத்ரை
ராகுகாலம்~ மதியம்~ 12.00-01.30
எமகண்டம்~ காலை~ 07.30-09.00
குளிகை~ காலை~ 10.30-12.00
ஶூர்யோதயம்~ காலை~06.09
ஶூர்யாஸ்தமனம்~ மாலை~05.49
சந்திராஷ்டமம்~ ம்ருகஶீர்ஷம்/திருவாதிரை
சூலம்~வடக்கு
இன்று~ அலப்யம்/ஶ்ரவணவ்ரதம்/ கோஷாஷ்டமி
!!स्वस्तिप्रजाभ्यः परिपालयंतां, न्यायेन मार्गेण महीं महीशाः ।
गोब्राह्मणेभ्यः शुभमस्तु नित्यं, लोकाः समस्ताः सुखिनोभवंतु ॥
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः!!
!!धर्मो रक्षति रक्षित:!!
!!लोकः समस्ताः सुखिनो भवन्तु!!
!!ॐ सर्वे भवन्तु सुखिनः। सर्वे सन्तु निरामयाः।
सर्वे भद्राणि पश्यन्तु। मा कश्चित् दुःख भाग्भवेत्!!
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः!!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.
ஹோரை புதன்கிழமை
காலை
6-7.புதன். சுபம்
7-8.சந்திரன்.சுபம்
8-9. சனி.. அசுபம்
9-10.குரு. சுபம்
10-11. செவ்வா.அசுபம்
11-12. சூரியன்.அசுபம்
பிற்பகல்
12-1. சுக்கிரன்.சுபம்
1-2. புதன். சுபம்
2-3. சந்திரன்.சுபம்
மாலை
3-4. சனி..அசுபம்
4-5. குரு. சுபம்
5-6. செவ்வா.அசுபம்
6-7. சூரியன். அசுபம்
நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.
thiruvalluvar deivapulavar
இன்றைய (29-10-2025) ராசிபலன்கள்
மேஷம்நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். நண்பர்களால் ஆதாயம் ஏற்படும். எதிர்பாராத சிலரின் சந்திப்புகளால் மாற்றம் உண்டாகும். வியாபார இடமாற்றம் குறித்த எண்ணங்கள் மேம்படும். எதிலும் தனித்தன்மையுடன் செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் முயற்சிகள் சாதகமாகும். பக்தி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
அஸ்வினி : ஆசைகள் நிறைவேறும்.
பரணி : மாற்றம் ஏற்படும்.
கிருத்திகை : முயற்சிகள் சாதகமாகும்.
நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்ள வேண்டிவரும். உத்தியோகத்தில் இருந்த சங்கடங்கள் விலகும். முயற்சியில் லாபம் காண்பீர்கள். மனதளவில் இருந்த வருத்தம் நீங்கும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடுகள் உண்டாகும். உடலில் ஒருவிதமான சோர்வுகள் தோன்றும். புதிய தொழில் முயற்சியில் ஈடுபடுவீர்கள். பரிசு கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெண்மை நிறம்
கிருத்திகை : சங்கடங்கள் விலகும்.
ரோகிணி : ஈடுபாடுகள் உண்டாகும்.
மிருகசீரிஷம் : முயற்சிகள் மேம்படும்.
எதிர்காலம் பற்றிய சிந்தனைகள் இருக்கும். கவனக்குறைவால் சில விரயம் உண்டாகும். சந்தர்ப்ப சூழ்நிலைகள் அறிந்து செயல்படவும். வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. வீட்டு பராமரிப்பு செலவுகள் ஏற்படும். உத்தியோகத்தில் பொறுப்புகள் மேம்படும். தனிப்பட்ட கருத்துகளில் கவனம் வேண்டும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள் நிறம்
மிருகசீரிஷம் : விரயம் உண்டாகும்.
திருவாதிரை : அனுசரித்து செல்லவும்.
புனர்பூசம் : கவனம் வேண்டும்.
புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். செயல்களில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். பணி நிமித்தமான புதிய வாய்ப்புகள் வந்து சேரும். ஏற்றுமதி இறக்குமதி வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். தவறிய சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். கொடுக்கல் வாங்கலில் விவேகம் வேண்டும். திட்டமிட்டு செயல்படுவதால் நன்மை உண்டாகும். பகை விலகும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்
புனர்பூசம் : அறிமுகம் கிடைக்கும்.
பூசம் : வருமானம் அதிகரிக்கும்.
ஆயில்யம் : நன்மையான நாள்.
உடலில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். கமிஷன் பணிகளில் லாபம் கிடைக்கும். இழுபறியாக இருந்த வழக்குகள் முடிவுக்கு வரும். எதிர்ப்புகள் படிப்படியாக விலகும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். பரிவு வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
மகம் : பிரச்சனைகள் நீங்கும்.
பூரம் : உதவிகள் கிடைக்கும்.
உத்திரம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
எதிர்பார்த்த சில காரியங்களில் போராடி வெற்றி பெறுவீர்கள். இலக்கிய பணிகளில் ஆர்வம் ஏற்படும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சூழல் அமையும். பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். சேமிப்பு சார்ந்த சிந்தனைகள் மனதில் உண்டாகும். பெற்றோர் ஆதரவுடன் சில செயல்களை முடிப்பீர்கள். மறைமுக எதிரிகள் விலகிச்செல்வார்கள். பாராட்டு கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
உத்திரம் : ஆர்வம் ஏற்படும்.
அஸ்தம் : தீர்வு கிடைக்கும்.
சித்திரை : எதிர்ப்புகள் விலகும்.
முக்கிய பிரமுகர்களின் சந்திப்புகள் ஏற்படும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டாகும். தொழிலில் லாபங்கள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மேன்மையான வாய்ப்புகள் கிடைக்கும். நண்பர்களால் அனுகூலம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். மனதளவில் இருந்த குழப்பங்கள் விலகும். பிரீதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்
சித்திரை : சந்திப்புகள் ஏற்படும்.
சுவாதி : வாய்ப்புகள் கிடைக்கும்.
விசாகம் : குழப்பங்கள் விலகும்.
பேச்சுக்களில் அனுபவம் வெளிப்படும். அரசு காரியங்கள் கைகூடிவரும். வாகனப் பகுதிகளை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். எதிர்ப்புகளை வெற்றி கொள்வதற்கான வியூகங்கள் கைகூடும். உழைப்புக்கு உண்டான பாராட்டுகள் கிடைக்கும். ஓய்வு கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்
விசாகம் : அனுபவம் வெளிப்படும்.
அனுஷம் : முன்னேற்றமான நாள்.
கேட்டை : பாராட்டுகள் கிடைக்கும்.
பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். குடும்பத்தில் சுபச்செலவு அதிகரிக்கும். செயல்களில் தனித்திறமை வெளிப்படும். சிலர் நகை, வாகனங்களை வாங்கி மகிழ்வீர்கள். கொடுக்கல் வாங்கலில் உண்டான சங்கடம் தீரும். வரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
மூலம் : வருமானம் மேம்படும்.
பூராடம் : தனித்திறமை வெளிப்படும்.
உத்திராடம் : சங்கடம் தீரும்.
மனதளவில் புதிய எண்ணங்கள் உருவாகும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். உதவி செய்வோரின் சுய ரூபங்களை அறிவீர்கள். தொழில் நிமித்தமான சிலரின் அறிமுகம் ஏற்படும். அலுவல் பணிகளில் ஏற்ற இறக்கமான சூழல் உண்டாகும். பொன் பொருள்களை கையாள்வதில் கவனம் வேண்டும். துணைவர் பற்றிய புரிதல் மேம்படும். தடைகள் மறையும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
உத்திராடம் : ஆதரவான நாள்.
திருவோணம் : அறிமுகம் கிடைக்கும்.
அவிட்டம் : புரிதல் மேம்படும்.
குடும்பத்தில் அனுசரித்து செல்லவும். வெளி உணவுகளை தவிர்க்கவும். அக்கம் பக்கம் இருப்பவர்களின் ஆதரவு பெருகும் மறைமுக எதிர்ப்புகள் நீக்கும். வியாபாரத்தில் ஏற்ற இறக்கமான சூழல் நிலவும். தெய்வ வழிபாடு மன அமைதியை கொடுக்கும். பெற்றோர்கள் வழியில் ஆதரவுகள் கிடைக்கும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு நிறம்
அவிட்டம் : அனுசரித்து செல்லவும்.
சதயம் : எதிர்ப்புகள் நீக்கும்.
பூரட்டாதி : ஆதரவுகள் கிடைக்கும்.
வியாபாரத்தில் புதிய பாதைகள் புலப்படும். எதிர்பாராத வரவு வந்து சேரும். எதிரிகளை வெற்றி கொள்ளும் சாமர்த்தியம் ஏற்படும். மனதில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும். திட்டமிட்ட வேலைகளை திட்டமிட்டபடி முடிப்பீர்கள். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். வாழ்க்கையில் புதிய நம்பிக்கை உண்டாகும். இனிமை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
பூரட்டாதி : வரவுகள் கிடைக்கும்.
உத்திரட்டாதி : தன்னம்பிக்கை பிறக்கும்.
ரேவதி : நம்பிக்கை பிறக்கும்.
thiruvalluvar
தினம் ஒரு திருக்குறள்
அதிகாரம்: அருளுடைமை குறள் எண்: 246
பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி
அல்லவை செய்தொழுகு வார்.
மு.வ உரை:
அருள் இல்லாதவராய் அறமல்லாதவைகளைச் செய்து நடப்பவர்களை, உறுதிப்பொருளாகிய அறத்திலிருந்து நீங்கித் தம் வாழ்க்கையின் குறிக்கோளை மறந்தவர் என்பார்.
ராஜா பர்த்ரு ஹரியின் சுபாஷிதம்
மாதா சமம் நாஸ்தி சரீர போஷணம்
சிந்தா சமம் நாஸ்தி சரீர சோஷணம்
பார்யா சமம் நாஸ்தி சரீர தோஷணம்
வித்யா சமம் நாஸ்தி சரீர பூஷணம்
ஒரு மனிதனுக்கு தாயைப் போல் சரீரத்தைப் போஷிக்கச் செய்பவர் யாருமில்லை
கவலையைப் போல் சரீரத்தை துன்புறுத்துவது எதுவுமில்லை.
மனைவியைப் போல் சரீரத்தை சுகப்படுத்துபவர் எவருமில்லை.
கல்வியைப் போல் சரீரத்தை அலங்கரிக்கும் பூஷணம் எதுவுமில்லை.
தினசரி. காம்
தினம் ஒரு திருமுறைமறை – 1. பதிகம் – 44 பாடல் – 7
பொங்கிளநாகமொ ரேகவடத்தோ டாமைவெண் ணூல்புனைகொன்றை
கொங்கிளமாலை புனைந்தழகாய குழகர்கொ லாமிவரென்ன
அங்கிளமங்கையோர் பங்கினர்பாச்சி லாச்சிரா மத்துறைகின்ற
சங்கொளிவண்ணரோ தாழ்குழல்வாடச் சதிர்செய்வதோ விவர்சார்வே.
விளக்கவுரை :
சினம் பொங்கும் இளநாகத்தைப் பூண்டு, ஒற்றையாடை அணிந்து, ஆமை ஓட்டையும், வெண்மையான பூணூலையும் அணிந்து, தேன்நிறைந்த புதிய கொன்றை மலர்மாலை அணிந்த அழகிய இளைஞர் இவர் என்று சொல்லும்படி இளநங்கையான உமையம்மையை ஒருபாகமாக உடைய திருப்பாச்சிலாச்சிராமத்து உறையும் சங்கொளி போல நீறு அணிந்த திருமேனியை உடைய இறைவரோ இத்தாழ்குழலாள் வருந்தச் சாமர்த்தியமான செயல் செய்வது. இது இவர் பெருமைக்குப் பொருத்தப்படுவதோ?
இன்றைய சிந்தனைக்கு…பயன்படுத்தாத திறமை, தன் ஆற்றலை இழந்து கொண்டே இருக்கும், உனக்குள் இருக்கும் திறமையை, பயன்படுத்து!
உன்னால் முடிந்ததை, சிறப்பாக செய்தால், அது திறமை, முடியாததை சிறப்பாக செய்தால், அதுவே தன்னம்பிக்கை!!
விழுந்த இலைகளுக்காக, எந்த மரமும், விழுந்து, விழுந்து அழுவதில்லை, புதிய தளிர்களை தந்து, மீண்டும், மீண்டும், தன்னம்பிக்கையோடு தலையாட்டும்!!!
பஞ்சாங்கம் – அக்.29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்! News First Appeared in Dhinasari Tamil