பத்திரம் மக்களே... அடுத்தடுத்து 2 காற்றழுத்த தாழ்வு... மழை வலுப்பெறும் என எச்சரிக்கை!
Dinamaalai November 07, 2025 06:48 PM

வங்கக்கடலில் தொடர்ந்து இரண்டு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாக வாய்ப்பு இருப்பதால், வரவிருக்கும் நாட்களில் வடகிழக்கு பருவமழை வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தற்போது வடகிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மியான்மர் அருகே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு அமைந்துள்ளதாகவும், இதன் விளைவாக தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் கணித்துள்ளது.

நவம்பர் 7, நவம்பர் 8 ஆகிய தேதிகளில் மாநிலத்தின் சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை வரலாம். மேலும் நவம்பர் 15க்கு பிறகு வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரமடையும் என்பதால், முக்கியமான உள்கட்டமைப்பு பணிகளிலும் கோரிக்கை பகுதிகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என வானிலை வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர்.

மழை தீவிரமாவதற்கான அறிகுறிகள் தென்படுவதால், கரையோர மாவட்டங்களில் மீனவர்கள் எச்சரிக்கையாக இருக்கவும், அவசர தேவையின்றி கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மாநில மக்களும் இடியுடன் கூடிய மழை காலநிலையில் மரங்களின் கீழ் தங்குவது மற்றும் திறந்த வெளிகளில் மின்னல் தாக்கத்துக்கு ஆளாகும் சூழ்நிலைகளைத் தவிர்க்க வேண்டும் என அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.