அமெரிக்காவில், பலத்த மழையில் தவித்த மாற்றுத்திறனாளிப் பெண் ஒருவருக்கு இந்திய இளைஞர் ஒருவர் உதவிய மனதை உருக்கும் காணொளி சமூக வலைதளங்களில் பரவலான கவனத்தைப் பெற்றுள்ளது. நோவா என்ற பெயருடைய அந்த இளைஞர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்தக் காட்சியைப் பகிர்ந்துள்ளார். அப்போது பலத்த மழை பெய்து கொண்டிருந்ததாகவும், நடக்க முடியாமல் சிரமப்பட்ட அந்தப் பெண்ணிடம், “மழை அதிகமாகப் பெய்கிறது, உங்களால் நடக்க முடியாது, எங்கே போக வேண்டும்?” என்று தான் கேட்டதாகவும் நோவா தெரிவித்துள்ளார்.
View this post on Instagram
A post shared by Noah (@flexnoahh)
அந்தப் பெண், தனது மகளின் வீட்டிற்குச் செல்ல விரும்புவதாகக் கூறியுள்ளார். சிறிதும் யோசிக்காமல் நோவா, அப்பெண்ணைத் தனது காரில் ஏற்றிச் சென்று, அவர் பாதுகாப்பாக மகள் வீட்டை அடைவதை உறுதி செய்துள்ளார். நோவா அந்தக் காணொளியின் கீழ், “மழையில் சிரமப்பட்ட ஒரு மாற்றுத்திறனாளிப் பெண்ணைக் கண்டேன். அனைத்தையும் விட்டுக்கொடுத்து, தற்போது தனது மகளின் கார் கொட்டகையில் அன்புடன் வசித்து வருகிறார்.
அவர் பாதுகாப்பாக வீட்டிற்குச் செல்ல வேண்டும் என்பதற்காக நான் காரில் அழைத்துச் சென்றேன். சில நேரங்களில், இரக்கம் மட்டுமே ஒரு தருணத்தையோ அல்லது வாழ்க்கையையோ மாற்றப் போதுமானது” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த மனிதாபிமான செயலுக்காக நோவாவை சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டி, “உண்மையான இந்திய அடையாளத்தை நிரூபித்தீர்கள்” என்று கருத்துத் தெரிவித்தனர்.
அந்தப் பெண் கீழே இறங்கியது குறித்து எழுந்த கேள்விக்குப் பதிலளித்த நோவா, தனக்குப் பயணத்தின்போது உதவும் ஒரு நண்பர் அவருடன் இருந்தார் என்றும், சில அடிகள் அவரால் ஆதரவுடன் நடக்க முடியும் என்றும் தெரிவித்து, மனிதர்களின் கதைகளைக் கேட்பது எளிதல்ல என்று நெகிழ்ச்சியுடன் பதிலளித்தார்.