அதிர்ச்சி.. தந்தையின் துப்பாக்கியால் சக மாணவனை துப்பாக்கியால் சுட்ட +1 மாணவன்!
Dinamaalai November 10, 2025 02:48 AM

ஹரியானா மாநிலம் குருக்ராம் செக்டர்-48 உயர்நிலை குடியிருப்பு பகுதியில் 11ஆம் வகுப்பு மாணவர் ஒருவரால், தந்தைக்கு சொந்தமான லைசென்ஸ் துப்பாக்கியை பயன்படுத்தி சக மாணவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய அதிர்ச்சி சம்பவம் ஏற்பட்டுள்ளது. கழுத்தில் குண்டு துளைத்ததால் காயமடைந்த மாணவர் தனியார் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக 2 சிறார்கள் போலீசாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்தில் இருந்து துப்பாக்கி, 2 மாகசின், 70 நேரடி குண்டுக்கள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டன. மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல், பழிவாங்கும் நோக்கத்தால் இந்த தாக்குதல் நடந்ததாக ஆரம்ப தகவல்கள் தெரிவிக்கின்றன.

சனிக்கிழமை இரவு சுமார் 9.30 மணியளவில் செக்டர்-48 இல் உள்ள ஒரு வாடகை வீட்டில் இந்த சம்பவம் நடைபெற்றது. குற்றம் சாட்டப்பட்ட மாணவன் தனது 3 நண்பர்களை வீட்டிற்கு அழைத்துள்ளார். அங்கு ஏற்பட்ட தகராறில், அவரது தந்தைக்கு உரிய லைசென்ஸ் துப்பாக்கியை எடுத்துக்கொண்டு ஒரு மாணவரை சுட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

உடனடியாக அப்பகுதி போலீசார் அழைப்பைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்குச் சென்று காயமடைந்த மாணவரை மருத்துவமனைக்கு அனுப்பினர். மற்ற 2 சிறார்களும் விசாரணைக்காக காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்த மாணவனின் தாய் அளித்த புகாரில், இரண்டு மாதங்களுக்கு முன்பு பள்ளியில் ஏற்பட்ட சண்டையை மனதில் வைத்து, பழிவாங்கும் நோக்கத்தால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. சனிக்கிழமை மாலை நண்பன் அழைத்ததால், ஆரம்பத்தில் செல்ல தயங்கிய மாணவர், பின்னர் சம்மதித்து கேர்கி தௌலா டோல் பிளாசா அருகே சந்தித்துள்ளார். அங்கிருந்து பள்ளி நண்பர்கள் அவரை செக்டர்-48 உள்ள வீட்டிற்கு அழைத்துச் சென்று தாக்குதல் நடத்தியதாக புகார் கூறப்பட்டுள்ளது.

விசாரணையில் மூவரும் ஒரே பள்ளி, ஒரே வகுப்பில் படிப்பவர்கள் என உறுதி செய்யப்பட்டுள்ளது. முக்கிய குற்றம் சாட்டப்பட்ட மாணவன் தனது தந்தைக்கு சொந்தமான லைசென்ஸ் துப்பாக்கியை பயன்படுத்தியதாகவும், அவரது தந்தை பாட்ட்லி கிராமத்தைச் சேர்ந்த நில வர்த்தகர் எனவும் கூறப்பட்டுள்ளது. சதார் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, மேலான விசாரணை நடைபெற்று வருகிறது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.