காவலர் குடியிருப்பில் இளைஞர் வெட்டிக்கொலை! திருச்சியில் பரபரப்பு
Top Tamil News November 10, 2025 07:48 PM

பட்டப்பகலில் காவலர் குடியிருப்பு வளாகத்தில் நடந்த கொலை சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி மாநகரம் பீமநகர் கீழத்தெருவை சேர்ந்தவர் தாமரைச்செல்வன்(25) இவர்  தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இன்று காலை பீமநகர் அருகே உள்ள மார்சிங்பேடை பகுதியில்  இருசக்கர வாகனத்தில் சென்ற கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு இரண்டு இரு சக்கர வாகனத்தில் வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் தாமரைச்செல்வனின் இரு சக்கர வாகனத்தை மோதினர். இதில் அவர் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். அந்த கும்பல் அவரை அரிவால் உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டி உள்ளனர். தாமரை செல்வன் அவர்களிடமிருந்து தப்பிக்க அருகிலிருந்த காவலர் குடியிருப்புக்குள் சென்று அங்குள்ள வீட்டிற்குள் சென்றுள்ளார். ஆனால் அவரை துரத்தி சென்ற கும்பல்   சரமாரியாக தாமரை செல்வனை வெட்டி படுகொலை செய்தனர். இது குறித்து தகவலறிந்த பாலக்கரை போலீசார் மற்றும் வடக்கு துணை ஆணையர் சிபின்  சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டார். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. கைரேகை நிபுணர்கள் சம்பவம் நடந்த இடத்தில் கைரேகைகளை சேகரித்தனர்.

போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில்  தாமரை செல்வன்  ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். ரியல் எஸ்டேட் தொழில் யார் அதிகம் கமிஷன் பெறுவது என்பதில் தாமரைச்செல்வனுக்கும் திருவானைக்காவல் பகுதியை சேர்ந்த சதீஷ் என்பவருக்கும் போட்டி இருந்துள்ளது. இவர்களுக்குள் அடிக்கடி  தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த கொலை தொடர்பாக திருவானைக்காவல் கொண்டையம் பேட்டை சேர்ந்த இளமாறன் என்பவரை போலீசார் பிடித்த நிலையில், ஸ்ரீரங்கத்தை சேர்ந்த கணேசன், நந்து, சதீஷ் மற்றும் பிரபாகரன் ஆகியோரை தேடி வருகின்றனர். 


 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.