“அதிமுகவில் இருந்து வந்தாலும் திறமை இருந்தால் திமுகவில் பதவி”- எ.வ.வேலு
Top Tamil News November 13, 2025 01:48 PM

எடப்பாடி பழனிச்சாமி சங்கிக் கொள்கையை தாங்கி பிடிப்பதால் அதிமுகவிலிருந்து திமுகவிற்கு வருகிறார்கள் என மதுரையில் அமைச்சர் எ.வ.வேலு பேட்டியளித்துள்ளார்.

மதுரை கோரிப்பாளையம் மற்றும் மேலமடை ஆகிய பகுதிகளில் கட்டப்பட்ட வரும் உயர்மட்ட மேம்பால பணிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பார்வையிட்டு ஆய்வு செய்தார், நிகழ்வில் மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எ.வ.வேலு, "10 ஆண்டு காலம் அதிமுக ஆட்சியில் தென் தமிழகம் புறக்கணிக்கப்பட்டது, திமுக ஆட்சிக்கு அமைந்தவுடன் தென் தமிழகத்திற்கு முதலமைச்சர் முக்கியத்துவம் அளித்துள்ளார், 150 கோடி ரூபாய் மதிப்பிட்டு மதுரை மேலமடையில் உயர்மட்ட மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது, மக்களின் நீண்ட கோரிக்கை எடுத்து மதுரை கோரிப்பாளையத்தில் 190 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நீர்மட்டம் மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. டிசம்பர் 7 ஆம் தேதி மதுரை மேலமடையில் கட்டப்பட்ட உயர்மட்ட மேம்பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார், மதுரை கோரிப்பாளையத்தில் கட்டப்பட்டு வரும் உயர் மட்ட மேம்பாலப் பணிகள் ஜனவரியில் முடிக்கப்படும். அதிமுக ஆட்சிக்கு கட்டப்பட்ட பாலங்களில் விதிமுறைகள் பின்பற்றப்படாத விபத்துக்கள் நடைபெற்றது, திமுக ஆட்சியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலங்களில் பாதுகாப்பு அம்சங்கள் முழுமையாக கடைபிடிக்கப்படுகிறது, திமுக ஆட்சியில் கட்டப்பட்ட மேம்பாலங்களில் உள்ள வளைவுகளில் அமெரிக்கா தொழில் நுட்பங்கள் பயன்படுத்தப்படுகிறது, பாலங்களின் வளைவுகளில் மட்டுமே விபத்துக்கள் நடைபெறுகிறது.

 மதுரை தெற்குவாசல் - வில்லாபுரம் இடையே உயர்மட்ட மேம்பாலம் கட்டுவதற்கு சாத்திய கூறுகள் உள்ளதா? என ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது, ஆய்வு முடிவுகளின் படி திட்ட மதிப்பீடு தயார் செய்யப்படும். பொதுப்பணித்துறையில் லஞ்சம் பெற்றதாக உறுதி செய்யப்படாத குற்றச்சாட்டுகளுக்கு நான் எப்படி பொறுப்பேற்க முடியும், குற்றச்சாட்டுக்கள் உறுதியானதால் பல்வேறு நபர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளேன், ஆதாரப்பூர்வமாக புகார்கள் வந்தால் நிச்சயமாக நடவடிக்கை எடுப்பேன். இந்தியாவில் உள்ள ஜனநாயக ரீதியான அரசியல் கட்சிகள் SIR ஐ எதிர்க்கிறது, தமிழகத்தில் ஏற்கனவே எட்டு முறை SIR நடைபெற்றுள்ளதால் SIR ஐ தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கவில்லை, SIR ஐ மேற்கொள்ள காலமும் நேரமும் போதாது என்பதைத்தான் கூறுகிறோம், வடகிழக்கு பருவமழை, பொங்கல் விழா, தேர்தல் தேதி அறிவிப்பு இருப்பதால் தற்போது SIR மேற்கொள்ளக் கூடாது என கூறுகிறோம். கொளத்தூரில் கள்ள ஓட்டுக்கள் இருக்கிறது என்பதை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வீடு, வீடாக சென்று ஆய்வு நடத்தினாரா?, அரசியலில் தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதற்காக எடப்பாடி பழனிச்சாமி ஏதாவது ஒன்றை பேசி வருகிறார். நாங்கள் எதை சொன்னாலும் அதற்கு எடப்பாடி பழனிச்சாமி எதிர் கருத்துதான் கூறுவார். இந்தியாவில் உள்ள அனைவரும் SIR ஐ எதிர்த்து கருத்து சொல்லும் போது எடப்பாடி பழனிச்சாமி மட்டும் SIR ஐ ஆதரித்து கருத்து சொல்வது ஏதற்காக?, பாஜகவோடு அதிமுக கூட்டணி வைத்துள்ளதால் பாஜகவின் செயல்பாடுகளுக்கு அதிமுக ஒத்து ஊதுகிறது. 

மனோஜ் பாண்டியனுக்கு புரியாமலா திமுகவிற்கு வந்திருப்பார்? தமிழக அரசியலில் அறிஞர் அண்ணா, தந்தை பெரியார் வகுத்துக் கொடுத்த திராவிட கொள்கையை கலைஞர் நிறைவேற்றினார் அதனையே மு.க.ஸ்டாலின் நிறைவேற்றி வருகிறார், திராவிட கொள்கையை திமுக மட்டும் தான் கடைப்பிடிப்பதால் பிற கட்சிகளில் இருந்து திமுகவிற்கு வருகிறார்கள், எடப்பாடி பழனிச்சாமி சங்கிக் கொள்கையை தாங்கி பிடிக்கிறார், அதனால்தான் அதிமுகவிலிருந்து திமுகவிற்கு வருகிறோம் என செல்கிறார்கள், இதிலென்ன A, B, C Team, திமுகவிற்கு வருபவர்கள் திமுகவின் கொள்கையை ஏற்றுக் கொண்டு வருகிறார்கள், திராவிட மாடல் ஆட்சியில் ஏழை, எளிய மக்களுக்காக முதலமைச்சர் திட்டங்களை தீட்டி செயல்படுத்துவதால் திமுகவில் இணைகிறார்கள். திமுகாவிற்காக நீண்ட காலமாக உழைப்பவர்களுக்கு பதவிகள் வழங்கப்பட்டுள்ளது, துரைமுருகன், கே.என்.நேரு, தங்கம் தென்னரசு என திமுகவிற்கு உழைத்தவர்களுக்கு பதவி வழங்கப்பட்டுள்ளது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுகவில் திறமை உள்ளவர்களை பயன்படுத்திக் கொள்வார், திறமை உள்ளவர்கள் திமுகவில் உள்ளவர்களா? அதிமுகவில் இருந்து வந்தவர்களா? என பார்க்க மாட்டார்” என பேசினார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.