அலர்ட்! இடி, மின்னலுடன் மழை வரும் – கடலூர், தஞ்சாவூர் உட்பட 9 மாவட்டங்களுக்கு 'கனமழை' சான்ஸ்! சென்னை வானிலை மையம் சொன்ன தகவல்..!!
SeithiSolai Tamil November 16, 2025 07:48 PM

தமிழகத்தில் இன்று (நவம்பர் 16) ஒருசில இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக, கடலோர மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்களில் மழைப் பொழிவுக்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.

குறிப்பாக, இன்று கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், விழுப்புரம் ஆகிய 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய மிக வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. எனவே, இந்த மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் மீனவர்கள் உரிய முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.