தமிழ்நாடு முழுவதும் தள்ளுவண்டியில் பானிபூரி, வடை, சூப், சிக்கன் பக்கோடா உள்ளிட்ட உணவு வகைகளை விற்பனை செய்யும் அனைத்து கடைகளும் இனி FSSAI உரிமம் கட்டாயம் பெற வேண்டும் என உணவுப் பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது.
மக்கள் ஆரோக்கியமும், உணவுத் தரமும் முக்கியம் என்பதைக் கருத்தில் கொண்டு இந்த கடுமையான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உத்தரவு விவரங்கள்:FSSAI உரிமம் இல்லாமல் இயங்கும் தள்ளுவண்டி கடைகளுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
உரிமம் பெறுவது ஆன்லைன் அல்லது இ-சேவை மையங்களில் முற்றிலும் இலவசம்.
உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நேரடியாக சென்று விற்பனையாளர்களுக்கு வழிமுறைகள் விளக்க உத்தரவிடப்பட்டுள்ளனர்.
தள்ளுவண்டி கடை விற்பனையாளர்கள் உரிமம் பெற்றுள்ளார்களா என தொடர்ச்சியான கண்காணிப்பு செய்யப்படும்.
உரிமம் பெறாதவர்கள் அபராதம் மற்றும் சட்ட நடவடிக்கை சந்திக்க நேரிடும்.
இந்தத் தீர்மானம் நடைமுறைக்கு வந்ததால், சாலையோர உணவுக் கடைகளின் தரமும், சுத்தமும் கட்டுப்பாட்டுக்குள் வரும் என்று அதிகாரிகள் நம்புகின்றனர்.