தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, வரவிருக்கும் "தெலங்கானா ரைசிங் குளோபல் உச்சி மாநாட்டிற்கு" முன், ஹைதராபாத்தில் உள்ள முக்கிய சாலைகளுக்கு உலக பிரபலங்களின் பெயர்களை சூட்ட முன்மொழிந்துள்ளார்.
அமெரிக்க தூதரகத்தின் அருகில் செல்லும் சாலைக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பெயரால் டொனால்ட் டிரம்ப் அவென்யூ என்று பெயரிடப்பட உள்ளது. ஒரு பதவியில் இருக்கும் வெளிநாட்டு தலைவரின் பெயர் சூட்டப்படுவது இதுவே முதல்முறை என கருதப்படுகிறது. இந்த முடிவு உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்கும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப துறையின் பங்களிப்பை போற்றும் வகையில், கூகிளின் முதலீட்டை அங்கீகரித்து ஒரு சாலைக்கு கூகிள் ஸ்ட்ரீட் என்றும், மற்ற சாலைகளுக்கு மைக்ரோசாஃப்ட் சாலை மற்றும் விப்ரோ சந்திப்பு என்றும் பெயரிட ஆலோசிக்கப்படுகிறது. மேலும், ராவிரியாலாவில் உள்ள நெடுஞ்சாலைக்கு பத்ம பூஷண் ரத்தன் டாடாவின் பெயர் சூட்டப்படும்.
இந்த பெயரிடும் நடவடிக்கைக்கு மத்திய அமைச்சரும் பா.ஜ.க. தலைவருமான பண்டி சஞ்சய் குமார் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர், ரெட்டி 'ட்ரெண்டிங்கில்' உள்ளவர்களின் பெயர்களை சூட்டுவதாகவும், அதற்கு பதிலாக வரலாற்று பெருமை கொண்ட ஹைதராபாத் நகரத்தின் பெயரை மீண்டும் "பாக்யநகர்" என மாற்ற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
Edited by Siva