பஞ்சாங்கம் டிச.16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!
Dhinasari Tamil December 16, 2025 03:48 PM

பஞ்சாங்கம் டிச.16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்! Dhinasari Tamil %name%

இன்றைய பஞ்சாங்கம் – டிச.16

ஸ்ரீராமஜயம் | ஸ்ரீராம ஜயராம ஜய ஜய ராம

!!ஸ்ரீ:!!

श्री:
श्री मते रामानुजाय नम:
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

பஞ்சாங்கம்

மார்கழி~ 1 (16. 12.2025) செவ்வாய் கிழமை.
வருடம் ~ விச்வாவஸு வருடம் {விச்வாவஸு நாம சம்வத்ஸரம்}
அயனம் ~ தக்ஷிணாயனம்
ருது ~ *ஹேமந்த * ருது.
மாதம் ~ மார்கழி மாஸம் { தனுர் மாஸம்}
பக்ஷம் ~ க்ருஷ்ண பக்ஷம்.
*திதி ~ இரவு 1.49 am வரை த்வாதசி பின் த்ரயோதசி
நாள் ~ {பௌம வாஸரம்} செவ்வாய் கிழமை.
நட்சத்திரம்~ 4 34 pm வரை ஸ்வாதி பின் விசாகம்
யோகம் ~ அதிகண்டம்
கரணம் ~ கௌளவம்
அமிர்தாதியோகம் ~ சுபயோகம்
அசுபயோகம்
ராகு காலம் ~ மாலை 3.00 ~ 4.30.
எமகண்டம் ~ காலை 9.00 ~ 10.30.
நல்ல நேரம் ~ காலை 7.30 to 9.00 am and 4.30 to 5.30 pm
குளிகை ~ மதியம் 12.00 ~ 1.30.
சூரியஉதயம் ~ காலை 6.27
சந்திராஷ்டமம்~ பகல் 12.36 வரை மீனம் பின் மேஷம்
சூலம் ~ வடக்கு.
பரிகாரம் ~ பால்.
ஸ்ராத்ததிதி ~ த்வாதசி
இன்று * ~ தனுர் மாத பிறப்பு காலை 10.00 மணி

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துக்கள்

स्वस्तिप्रजाभ्यः परिपालयंतां, न्यायेन मार्गेण महीं महीशाः ।
गोब्राह्मणेभ्यः शुभमस्तु नित्यं, लोकाः समस्ताः सुखिनोभवंतु ॥
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः !!
!!धर्मो रक्षति रक्षित:!!
!!लोकः समस्ताः सुखिनो भवन्तु!!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

இன்றைய (16-12-2025) ராசி பலன்கள் மேஷம்

வருங்கால சேமிப்பு பற்றிய சிந்தனை மேம்படும். புதிய பொறுப்புகள் வந்து சேரும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை இருக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். முயற்சிகள் சாதகமாக முடியும். இழுபறியான சில வழக்கு சாதகமாகும். தாய் வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். சிந்தனை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை நிறம்

அஸ்வினி : சிந்தனை மேம்படும்.
பரணி : ஆரோக்கியம் மேம்படும்.
கிருத்திகை : ஆதாயகரமான நாள்.

ரிஷபம்

குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். செயல்பாடுகளில் சில மாற்றங்கள் ஏற்படும். வியாபாரத்தில் லாபகரமான சூழல் உண்டாகும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நெருக்கடியான சில விஷயங்கள் குறையும். பழக்க வழக்கங்கள் மூலம் மேன்மை அடைவீர்கள். பரிசு கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிவப்பு நிறம்

கிருத்திகை : மாற்றங்கள் ஏற்படும்.
ரோகிணி : வாய்ப்புகள் கிடைக்கும்.
மிருகசீரிஷம் : மேன்மையான நாள்.

மிதுனம்

உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி அதிகரிக்கும். ஆன்மீகத்தில் ஈடுபாடு உண்டாகும். நிதானமான செயல்களால் நன்மை உண்டாகும். குடும்ப நபர்களிடம் மனம் திறந்து பேசுவது நல்லது. மனதில் கற்பனைகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். பணியாளர்கள் ஒத்துழைப்புடன் வியாபாரத்தை விருத்தி செய்வீர்கள். நம்பிக்கை பிறக்கும் நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர் நீல நிறம்

மிருகசீரிஷம் : மகிழ்ச்சி அதிகரிக்கும்.
திருவாதிரை : கற்பனைகள் அதிகரிக்கும்.
புனர்பூசம் : விருத்தி உண்டாகும்.

கடகம்

நட்பு வட்டம் விரியும். உடன் இருப்பவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். நூதன பொருள்கள் மீது ஆர்வம் ஏற்படும். குடும்பத்தினர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். அரசு காரியங்கள் அனுகூலமாக முடியும். யோகம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீல நிறம்

புனர்பூசம் : விட்டுக்கொடுத்து செல்லவும்.
பூசம் : தேவைகள் நிறைவேறும்.
ஆயில்யம் : அனுகூலமான நாள்.

சிம்மம்

மனதளவில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும். அரசு காரியங்களில் அலைச்சல் ஏற்படும். வாகனங்களால் சில விரயங்கள் நேரிடும். கலந்து ஆலோசித்து சில முடிவுகளை எடுப்பீர்கள். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். வியாபாரத்தில் திட்டமிட்டு செயல்படுவீர்கள். உயர் அதிகாரிகள் இடத்தில் நெருக்கம் மேம்படும். கவனம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்

மகம் : தன்னம்பிக்கை பிறக்கும்.
பூரம் : விரயங்கள் நேரிடும்.
உத்திரம் : திட்டமிட்டு செயல்படவும்.

கன்னி

நிகழ்கால தேவைகள் பூர்த்தியாகும். எதிர்க்கருத்து கூறியவர்கள் மனம் மாறுவர்கள். கூட்டு முயற்சியில் வெற்றி கிடைக்கும். குடும்ப பிரச்சனைகள் விலகும். விலகி சென்றவர்கள் விரும்பி வருவார்கள்.குடும்பத்தில் கலகலப்பான சூழல் நிலவும். புதியவர்கள் நட்பால் நன்மை ஏற்படும். அலுவலகத்தில் முக்கிய பொறுப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் வரவுகள் மேம்படும். கீர்த்தி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்

உத்திரம் : தேவைகள் பூர்த்தியாகும்.
அஸ்தம் : பிரச்சனைகள் விலகும்.
சித்திரை : வரவுகள் மேம்படும்.

துலாம்

முன்கோபத்தை குறைத்துக்கொள்ளவும். எதையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து செயல்படவும். குடும்பத்தில் மற்றவர்களுடன் அனுசரித்துச் செல்லவும். கணவன் – மனைவிக்கிடையே பொறுமை அவசியம். உடல் ஆரோக்கிய சிந்தனை மேம்படும். அலுவலகத்தில் எதிர்பாராத சில மாற்றம் ஏற்படும். ஓய்வு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர் நீல நிறம்

சித்திரை : சிந்தித்து செயல்படவும்.
சுவாதி : பொறுமை வேண்டும்.
விசாகம் : மாற்றம் ஏற்படும்.

விருச்சிகம்

கடன் சார்ந்த செயல்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். வெளியூர் பயணத்தால் உடலில் சோர்வு உண்டாகும். செல்வாக்கை வெளிக்காட்டுவதற்காக செலவுகள் செய்வீர்கள். செயல்பாடுகளில் ஒருவிதமான ஆர்வமின்மை உண்டாகும். புதிய நபர்களிடம் கவனம் வேண்டும். தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது மன அமைதியை தரும். மேலதிகாரிகளிடம் அனுசரித்து செல்லவும். பரிவு வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

விசாகம் : நெருக்கடிகள் உண்டாகும்.
அனுஷம் : ஆர்வமின்மையான நாள்.
கேட்டை : அனுசரித்து செல்லவும்.

தனுசு

குடும்பத்தில் மனம் விட்டு பேசுவீர்கள். நண்பர்களால் ஆதாயம் கிடைக்கும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். சக ஊழியர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். பெருந்தன்மையான செயல்களால் செல்வாக்கு அதிகரிக்கும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களால் லாபம் மேம்படும். ஆதாயம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
மூலம் : ஆதாயகரமான நாள்.
பூராடம் : ஒத்துழைப்பான நாள்.
உத்திராடம் : லாபம் மேம்படும்.

மகரம்

குடும்பத்தில் முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வெளிநாட்டு பயணம் சார்ந்த சிந்தனை மேம்படும். பக்தி எண்ணம் அதிகரிக்கும். அடுத்தவர்களை பற்றிய சிந்தனையை தவிர்க்கவும். எதிரிகளின் பலம் மற்றும் பலவீனம் அறிந்து செயல்படவும். நண்பர்கள் வழியில் அனுசரித்து செல்லவும். வியாபாரத்தில் புது முதலீடுகளில் கவனம் வேண்டும். இன்பம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீல நிறம்

உத்திராடம் : சிந்தனை மேம்படும்.
திருவோணம் : புரிதல் மேம்படும்.
அவிட்டம் : கவனம் வேண்டும்.

கும்பம்

குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். உயர் அதிகாரிகள் ஆதரவாக செயல்படுவார்கள். மனதில் திருப்தியான சூழல் அமையும். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். வரவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீல நிறம்

அவிட்டம் : ஆதரவு பெருகும்.
சதயம் : திருப்தியான நாள்.
பூரட்டாதி : மகிழ்ச்சியான நாள்.

மீனம்

அலுவலகத்தில் பொறுப்புக்கள் மேம்படும். சிந்தனை போக்கில் குழப்பம் உண்டாகும். எதிலும் பதற்றம் இன்றி செயல்படவும். விமர்சன பேச்சுக்கள் தோன்றி மறையும். வியாபாரத்தில் கனிவு வேண்டும். மறதியால் சில பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். எதிலும் பொறுமையுடன் செயல்படவும். எதிர்ப்புகள் மறையும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

பூரட்டாதி : பொறுப்புக்கள் மேம்படும்.
உத்திரட்டாதி : கனிவு வேண்டும்.
ரேவதி : பொறுமையுடன் செயல்படவும்.

thiruvalluvar deivapulavar தினம் ஒரு திருக்குறள்

அதிகாரம்: புலால் மறுத்தல் | குறள் 254:

அருளல்ல தியாதெனிற் கொல்லாமை கோறல்
பொருளல்ல தவ்வூன் தினல்.

மு.வ உரை: அருள் எது என்றால் ஓர் உயிரையும் கொல்லாமலிருத்தல் அருளல்லாது எது என்றால் உயிர்களைக்கொள்ளுதல் அதன் உடம்பைத் தின்னுதல் அறம் அல்லாதது.

தினம் ஒரு திருமுறை

மறை – 1. பதிகம் – 44 பாடல் – 1

44வது பதிக பாடல்கள் அனைத்தும் திருப்பாச்சிலாச்சிராமம் திருத்தலத்தில் பாடல் பெற்றவை ஆகும்

துணிவளர்திங்கள் துளங்கிவிளங்கச் சுடர்ச்சடை சுற்றிமுடித்துப்
பணிவளர்கொள்கையர் பாரிடஞ்சூழ வாரிடமும் பலிதேர்வர்
அணிவளர்கோல மெலாஞ்செய்துபாச்சி லாச்சிரா மத்துறைகின்ற
மணிவளர்கண்டரோ மங்கையைவாட மயல்செய்வதோ விவர்மாண்பே .

விளக்கவுரை :

முழுமதியினது கீற்றாக விளங்கும் பிறைமதியை விளங்கித் திகழுமாறு அதனைத் தம் ஒளி பொருந்திய சடையினைச் சுற்றிக் கட்டி, பாம்புகளை அணிந்தவராய்ப் பூதங்கள் தம்மைச்சூழ எல்லோரிடமும் சென்று பலியேற்பவராய், அழகிய தோற்றத்துடன் விளங்கும் திருப்பாச்சிலாச்சிராமத்தில் உறைகின்ற நீலமணி போலும் கண்டத்தவராகிய இறைவர், கொல்லிமழவன் மகளாகிய இப்பெண்ணை மயல் செய்வது மாண்பாகுமோ?

தினம் ஒரு பாசுரம்

நாலாயிர திவ்யப் பிரபந்தம்

முழுதும் வெண்ணெயளைந்து தொட்டுண்ணும்
முகிழிளஞ் சிறுத்தாமரைக் கையும்,
எழில்கொள் தாம்பு கொண்டடிப்பதற்கு எள்கு நிலையும்
வெண்தயிர் தோய்ந்த செவ்வாயும்,
அழுகையும் அஞ்சிநோக்கும் அந்நோக்கும்
அணிகொள் செஞ்சிறுவாய் நெளிப்பதுவும்,
தொழுகையும் இவை கண்ட அசோதை
தொல்லையின்பத்திறுதி கண்டாளே”

  • குலசேகரப் பெருமாள் அருளிய பெருமாள் திருமொழி
    (கண்ணனது பால லீலைகளைக் காணப்பெறாத தேவகியின் புலம்பல் – 715).

வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்…
தினசரி .காம்

சிந்தனைக்கு..

உன் மனம் தெளிவாக இருக்கும் வரை, உன்னை எவராலும் வீழ்த்த முடியாது; அடுத்த வாய்ப்பு என்று ஒன்று இருக்கும் வரை, எதற்கும் அஞ்சாதே!

உன்னால் நேற்றை சரி செய்ய முடியாது, ஆனால் நாளையை உருவாக்க முடியும்; கோபம் ஒரு நிமிட ஆவேசம், ஆனால் அதன் விளைவுகள், வாழ்நாள் பாடம்!!

ஏமாற்றங்கள் பழகிப் போகிறதே தவிர, எதுவும் மறந்து போவதில்லை; கழன்று விழும் வரை, சிலரது முகமூடிகளையும், முகம் என, நீ நம்பி கொண்டிருக்கிறாய்!!!

பஞ்சாங்கம் டிச.16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்! News First Appeared in Dhinasari Tamil

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.