பஞ்சாங்கம் டிச.28 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்! Dhinasari Tamil %name%
ஶ்ரீராமஜெயம் ஸ்ரீராம ஜெயராம ஜெய ஜெய ராம
||श्री:||
!!श्रीरामजयम!! ஸ்ரீராமஜெயம்
!!ஸ்ரீ:!!
श्री: श्रीमते रामानुजाय नम:
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
மார்கழி * ~ 13
(28. 12.2025* ) ஞாயிற்றுக் கிழமை*
வருடம் ~ விச்வாவஸூ வருஷம் {விச்வாவஸு நாம சம்வத்ஸரம்}
அயனம் ~ தக்ஷிணாயனம்
ருது ~ ஹேமந்த* ருது.
மாதம்~ மார்கழி மாஸம் { *தனுர் மாஸம் }
பக்ஷம் ~ சுக்ல பக்ஷம்.
திதி ~ 7.51 am வரை அஷ்டமி பின் நவமி
நாள் ~ பானு வாஸரம் (ஞாயிற்றுக்கிழமை)
நட்சத்திரம் ~ ரேவதி
யோகம் ~ வரியான்
கரணம் ~ பாலவம்
அமிர்தாதியோகம் ~ சுபயோகம்.
ராகு காலம்~ மாலை 4.30~ 6.00.
எமகண்டம் ~ மதியம் 12.00 ~ 1.30.
குளிகை ~ மாலை 3.00 ~ 4.30.
நல்லநேரம் * ~. 9.00 to 10.30 am 3.00 to 4.30pm
சூரிய உதயம் ~. காலை 6.33
சந்திராஷ்டமம் ~ ஸிம்மம்
சூலம் ~ மேற்கு.
பரிகாரம் ~ வெல்லம்.
ஸ்ரார்த்ததிதி ~ நவமி
இன்று ~
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துக்கள்.
!!स्वस्तिप्रजाभ्यः परिपालयंतां, न्यायेन मार्गेण महीं महीशाः । गोब्राह्मणेभ्यः शुभमस्तु नित्यं, लोकाः समस्ताः सुखिनोभवंतु ॥
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः !!
!!धर्मो रक्षति रक्षित:!!
!!लोकः समस्ताः सुखिनो भवन्तु!!
!!ॐ सर्वे भवन्तु सुखिनः। सर्वे सन्तु निरामयाः। सर्वे भद्राणि पश्यन्तु। मा कश्चित् दुःख भाग्भवेत्!!
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः!!
ஞாயிற்றுக்கிழமை ஹோரை
காலை
6-7. சூரியன். அசுபம்.
7-8. சுக்கிரன். சுபம்
8-9.. புதன். சுபம்
9-10.. சந்திரன். சுபம்
10-11. சனி.. அசுபம்
11-12. குரு. சுபம்
பிற்பகல்
12- 1. செவ்வா. அசுபம்
1-2. சூரியன். அசுபம்
2-3. சுக்கிரன். சுபம்
3-4. புதன். சுபம்
மாலை
4-5. சந்திரன்.சுபம்
5-6 சனி.. அசுபம்
6-7 குரு. சுபம்
நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.
இன்றைய (28-12-2025) ராசி பலன்கள் மேஷம்
குடும்பத்தில் அனுசரித்து செல்லவும். கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபகரமான சூழல் உண்டாகும். சக ஊழியர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். உறவுகள் வழியில் அனுகூலமான வாய்ப்புகள் ஏற்படும். எதிர்பாராத சில பயணங்களால் அலைச்சல்கள் உண்டாகும். குழப்பம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீல நிறம்
அஸ்வினி : அனுசரித்து செல்லவும்.
பரணி : லாபகரமான நாள்.
கிருத்திகை : அலைச்சல்கள் உண்டாகும்.
கொடுக்கல் வாங்கலில் கவனத்துடன் இருக்கவும். கணவன் மனைவிக்கு இடையே புரிதல் ஏற்படும். திடீர் பணவரவுகள் உண்டாகும். உத்தியோகத்தில் ஒத்துழைப்பான சூழல் ஏற்படும். சிந்தனைப் போக்கில் தெளிவுகள் ஏற்படும். அணுகு முறையில் சில மாற்றம் ஏற்படும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். கடன் பிரச்சனைகள் குறையும். நன்மை மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
கிருத்திகை : புரிதல் ஏற்படும்.
ரோகிணி : ஒத்துழைப்பான நாள்.
மிருகசீரிஷம் : பிரச்சனைகள் குறையும்.
நண்பர்கள் வழியில் ஆதரவு கிடைக்கும். அதிகார பதவியில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். ஆன்மீகப் பணிகளில் நாட்டம் உண்டாகும். வேலையாட்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். சொந்த ஊர் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். பணி நிமித்தமான புதிய வாய்ப்புகள் தேடி வரும். வெளிவட்டாரத்தில் மதிப்புகள் அதிகரிக்கும். மாற்றம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மிருகசீரிஷம் : ஆதரவு கிடைக்கும்.
திருவாதிரை : அனுசரித்து செல்லவும்.
புனர்பூசம் : மதிப்புகள் அதிகரிக்கும்.
குடும்ப உறுப்பினர்கள் இடத்தில் அனுசரித்து செல்லவும். நட்பு வட்டம் விரிவடையும். வெளிவட்டாரத்தில் மதிப்புகள் அதிகரிக்கும். ஆன்மீக ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். ஆடை ஆபரணங்களில் கவனம் வேண்டும். வியாபாரத்தில் சிந்தித்து செயல்படவும். உத்தியோகத்தில் ஒத்துழைப்புகள் மேம்படும். எதிர்பாராத சில திருப்பங்கள் உண்டாகும். வெற்றி கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு நிறம்
புனர்பூசம் : அனுசரித்து செல்லவும்.
பூசம் : கவனம் வேண்டும்.
ஆயில்யம் : திருப்பங்கள் உண்டாகும்.
அக்கம் பக்கம் இருப்பவர்களிடம் அனுசரித்து செல்லவும். பயணங்களில் விவேகம் வேண்டும். கொடுக்கல் வாங்கலால் வேறுபாடுகள் உண்டாகும். வியாபார ரகசியங்களை பகிராமல் இருக்கவும். பொருளாதாரத்தில் ஏற்ற இறக்கம் உண்டாகும். பணிகளில் முன் கோபமின்றி செயல்படவும். மற்றவர்கள் மீதான கருத்துக்களை தவிர்க்கவும். உதவி கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள் நிறம்
மகம் : அனுசரித்து செல்லவும்.
பூரம் : வேறுபாடுகள் உண்டாகும்.
உத்திரம் : கருத்துக்களில் கவனம்.
மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பலம் மற்றும் பலவினங்களை அறிவீர்கள். தோற்ற பொழிவில் சில மாற்றம் உண்டாகும். புதிய வேலை சார்ந்த வாய்ப்புகள் சாதகமாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். சுப காரிய முயற்சிகளில் அனுகூலம் ஏற்படும். சினம் குறையும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
உத்திரம் : மகிழ்ச்சியான நாள்.
அஸ்தம் : வாய்ப்புகள் சாதகமாகும்.
சித்திரை : அனுகூலம் ஏற்படும்.
எதிர்பாராத சில செலவுகள் உண்டாகும். உடன் பிறந்தவர்களிடம் அனுசரித்து செல்லவும். தொழில் ரீதியான சில புதிய வாய்ப்புகள் ஏற்படும். நண்பர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். கடன் பிரச்சனைகள் குறையும். மனத்தில் இருந்த கவலைகள் நீங்கி தெளிவு பிறக்கும். பண வரவு மத்தியமாக இருக்கும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். மறதி விலகும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
சித்திரை : அனுசரித்து செல்லவும்.
சுவாதி : புரிதல் ஏற்படும்.
விசாகம் : அனுகூலம் உண்டாகும்.
புதிய செயல் திட்டங்களை அமைப்பீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். பழைய பிரச்சனைகளுக்கு தீர்வு ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்புகள் உண்டாகும். தற்பெருமையான பேச்சுக்களை குறைத்து கொள்ளவும். திறமைகளை வெளிப்படுத்துவதில் கவனம் வேண்டும். பூர்வீக சொத்துக்கள் பற்றிய சிந்தனைகள் ஏற்படும். ஓய்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள் நிறம்
விசாகம் : மகிழ்ச்சி உண்டாகும்.
அனுஷம் : ஒத்துழைப்புகள் உண்டாகும்.
கேட்டை : சிந்தனைகள் ஏற்படும்.
விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் பொறுமை வேண்டும். உடன் பிறந்தவர்கள் மூலம் ஆதரவு ஏற்படும். நெருக்கடியான சில பிரச்சனைகள் குறையும். உறவினர்கள் உறுதுணையாக இருப்பார்கள். அசதியும், சோர்வும் அவ்வப்போது தோன்றி மறையும். உத்தியோகத்தில் பொறுப்புகள் கூடும். கவலை விலகும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
மூலம் : பொறுமை வேண்டும்.
பூராடம் : பிரச்சனைகள் குறையும்.
உத்திராடம் : பொறுப்புகள் கூடும்.
தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். துணைவர் வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். வியாபாரத்தில் அலைச்சல்கள் ஏற்படும். உத்தியோகத்தில் திறமைகள் வெளிப்படும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். போட்டி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென் மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீல நிறம்
உத்திராடம் : ஆதரவான நாள்.
திருவோணம் : அலைச்சல்கள் ஏற்படும்.
அவிட்டம் : துரிதம் உண்டாகும்.
நண்பர்களுக்கு இடையே விவாதங்களை தவிர்க்கவும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வுகள் ஏற்படும். எதிர்பார்த்த மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வேலை ஆட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவது நல்லது. உழைப்பிற்கு உண்டான மதிப்புகள் கிடைக்கும். மனதளவில் தெளிவுகள் பிறக்கும். சுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு நிறம்
அவிட்டம் : வாதங்களை தவிர்க்கவும்.
சதயம் : மகிழ்ச்சியான நாள்.
பூரட்டாதி : தெளிவுகள் பிறக்கும்.
தேக ஆரோக்கியம் பொலிவு கூடும். அலைபாயும் மனதினால் சில சங்கடங்கள் தோன்றும். உடன் இருப்பவர்களை அனுசரித்து செல்லவும். தம்பதிகளுக்குள் ஏற்பட்ட பிரச்சனைகள் விலகும். பொது பிரச்சனைகளில் விவேகத்துடன் செயல்படவும். நீண்ட நாள் எதிர்பார்ப்புகளில் பொறுமை வேண்டும். இன்பம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
பூரட்டாதி : பொலிவு கூடும்.
உத்திரட்டாதி : பிரச்சனைகள் விலகும்.
ரேவதி : பொறுமை வேண்டும்.
கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்கு
ஆற்றாதார் இன்னா செயல். (குறள் 894)
பரிமேலழகர் உரை:
ஆற்றுவார்க்கு ஆற்றாதார் இன்னா செயல் – மூவகை ஆற்றலும்உடையார்க்கு அவை இல்லாதார் தாம் முற்பட்டு இன்னாதவற்றைச் செய்தல்; கூற்றத்தைக் கையால் விளித்தற்று – தானேயும் வரற்பாலனாய கூற்றுவனை அதற்கு முன்னே கைகாட்டி அழைத்தால ஒக்கும். (கையால் விளித்தல் -இகழ்ச்சிக் குறிப்பிற்று. தாமேயும் உயிர்முதலியகோடற்கு உரியாரை அதற்குமுன்னே விரைந்து தம்மேல் வருவித்துக்கொள்வார் இறப்பினது உண்மையும் அண்மையும் கூறியவாறு. இவை இரண்டு பாட்டானும் வேந்தரைப் பிழைத்தலின் குற்றம் கூறப்பட்டது.).
மணக்குடவர் உரை:
வலியுடையார்க்கு வலியில்லாதார் இன்னாதவற்றைச் செய்தல், தம்மைக் கொல்லும் கூற்றத்தைக் கைகாட்டி அழைத்தாற் போலும்.
மு.வரதராசனார் உரை:
ஆற்றல் உடையவர்க்கு ஆற்றல் இல்லாதவர் தீமை செய்தல், தானே வந்து அழிக்க வல்ல எமனைக் கைகாட்டி அழைத்தாற் போன்றது.
மறை – 2 | பதிகம் – 64 | பாடல் – 8
வாசங் கமழும் பொழில்சூ ழிலங்கை வாழ்வேந்தை
நாசஞ் செய்த நங்கள் பெருமா னமர்கோயில்
பூசைசெய்து வடியார் நின்று புகழ்ந்தேத்த
மூசி வண்டு பாடுஞ் சோலை முதுகுன்றே
விளக்கவுரை
மணம் கமழும் பொழில் சூழ்ந்த இலங்கை வாழ் வேந்தனாகிய இராவணனின் வலிமையை அழித்த நம்பெருமான் அமர்கின்ற கோயில், அடியவர் பூசை செய்து நின்று புகழ்ந்து போற்ற விளங்குவதும், வண்டுகள் மொய்த்துப்பாடும் சோலைகளை உடையதுமான முதுகுன்றாகும்
தினம் ஒரு திவ்யப் பிரபந்தம்
மோடியோடி லச்சையாய சாபமெய்தி முக்கணான்
கூடுசேனை மக்களோடு கொண்டுமண்டி வெஞ்சமத்
தோடவாண னாயிரம் கரங்கழித்த வாதிமால்
பீடுகோயில் கூடுநீர ரங்கமென்ற பேரதே.
– திருச்சந்த விருத்தம் திருமொழி – 6 (804)
விளக்கம் : காளியும் வெட்கத்தை விளைப்பதான சாபத்தையடைந்த ருத்ரனும் ஸ்வஜனங்களோடு திரண்ட ஸேனையை அழைத்துக்கொண்டு பயங்கரமான போர்க்களத்திலிருந்து வேகமாக ஓடிப்போன வளவிலே பாணாஸுரனது ஆயிரம் கைகளைஅறித்தொழித்த பரம புருஷனுடைய பெருமைதங்கிய கோயில் காவேரியோடு கூடின திருவரங்கமென்னும் திருநாமமுடையதாம்.
நன்னம்பிக்கை மொழி!பஞ்சாங்கம் டிச.28 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்! News First Appeared in Dhinasari Tamil