டாடா நகர்–எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற்பட்ட தீ விபத்து, பயணிகள் மத்தியில் கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நள்ளிரவில் திடீரென இரண்டு பெட்டிகளில் தீப்பிடித்ததால், தூக்கத்தில் இருந்த பயணிகள் அலறியடித்து வெளியேறினர். சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு மற்றும் ரயில்வே அதிகாரிகள் உடனடியாக மீட்பு பணிகளை மேற்கொண்டனர்.
இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், பலர் அதிர்ச்சியடைந்துள்ளனர். எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்துகள் மீண்டும் நிகழாமல் இருக்க, ரயில்களில் பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர். ரயில்வே நிர்வாகத்தின் அலட்சியமே இத்தகைய விபத்துகளுக்கு காரணம் எனவும் அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதனிடையே காயமடைந்த பயணிகளுக்கும், மாற்று ரயில்களில் அனுப்பி வைக்கப்பட்டவர்களுக்கும் தேவையான உணவு மற்றும் மருத்துவ வசதிகளை ரயில்வே நிர்வாகம் செய்து வருகிறது. உதவிக்காக விஜயவாடா, ராஜமுந்திரி, சம்கோட், எலமஞ்சலி, அனகப்பள்ளே ஆகிய இடங்களில் ஹெல்ப்லைன் எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன
அதன்படி உதவி எண்கள்
காயமடைந்தவர்கள் மற்றும் மாற்று ரயிலில் பயணம் செய்பவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் மருத்துவ வசதிகளை ரயில்வே நிர்வாகம் செய்து வருகிறது. உதவி எண்கள் (Helpline Numbers) விஜயவாடா (Vijayawada): 0866-2575167 ராஜமுந்திரி (Rajahmundry): 088-32420541, 088-32420543 சம்கோட் (Samalkot): 7382629990 Elamanchili: 7815909386 Anakapalle: 7569305669
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!