ஆர்டரில் எலி மருந்து..! ஆனால் வந்தது உயிர் காக்கும் எமன்… நள்ளிரவில் அரங்கேறிய சிலிர்க்க வைக்கும் மனிதநேயம்… ரியல் லைஃப் ஹீரோவுக்கு குவியும் பாராட்டு..!!
SeithiSolai Tamil January 10, 2026 03:48 AM

நள்ளிரவு நேரத்தில் எலி மருந்து ஆர்டர் செய்த பெண்ணின் மனநிலையை அறிந்து, அவருக்கு உரிய அறிவுரை கூறி தற்கொலை முயற்சியைத் தடுத்த பிளிங்கிட் (Blinkit) டெலிவரி ஊழியரின் மனிதாபிமானச் செயல் சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

தமிழகத்தைச் சேர்ந்த பிளிங்கிட் நிறுவன டெலிவரி ஊழியர் ஒருவருக்கு, நள்ளிரவு நேரத்தில் ஒரு ஆர்டர் வந்தது. அதில் மூன்று பாக்கெட் எலி மருந்துகள் ஆர்டர் செய்யப்பட்டிருந்தன. வழக்கமான ஒரு டெலிவரி தானே என்று கிளம்பிய அந்த ஊழியருக்கு, அந்த அகால நேரத்தில் எலி மருந்து ஆர்டர் செய்யப்பட்டது ஏதோ ஒரு தவற்றை உணர்த்தியது. குறிப்பிட்ட முகவரிக்குச் சென்று கதவைத் தட்டியபோது, அங்கிருந்த பெண் மிகுந்த மனவேதனையுடன் அழுதுகொண்டே கதவைத் திறந்துள்ளார். இதைக் கண்ட டெலிவரி ஊழியர், அந்தப் பெண் ஏதோ தவறான முடிவை எடுக்கப் போகிறார் என்பதைத் தனது உள்ளுணர்வால் உணர்ந்தார்.

அவரிடம் கனிவாகப் பேச்சு கொடுத்த ஊழியர், “உங்களுக்கு என்ன பிரச்சனை இருந்தாலும் தற்கொலை போன்ற தவறான முடிவை எடுக்காதீர்கள். உங்கள் உயிர் விலைமதிப்பற்றது” என்று ஆறுதல் கூறியுள்ளார். ஆர்டர் செய்த பெண் அதனை மறுத்த போதிலும், “எலி தொல்லை இருந்தால் மாலை நேரத்திலேயே வாங்கியிருக்கலாம், நள்ளிரவில் வாங்க வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் பொய் சொல்கிறீர்கள்” என்று கூறி, அந்த ஆர்டரை டெலிவரி செய்ய மறுத்து ரத்து செய்தார். வாங்கிய விஷப் பாக்கெட்டுகளைத் திரும்ப எடுத்துச் சென்ற அவர், ஒரு உயிரைக் காப்பாற்றிய திருப்தியுடன் அங்கிருந்து திரும்பினார்.

 

 

View this post on Instagram