கன்னியாகுமரி சீட் கனவு? “விஜய்யை சுற்றியிருக்கும் சதிக்கூட்டம்…” 27 வருட மேலாளர் பி.டி. செல்வகுமார் உடைக்கும் அதிரடி ரகசியங்கள்..!!
SeithiSolai Tamil January 11, 2026 10:48 AM

நடிகர் விஜய்யுடன் சுமார் 27 ஆண்டுகள் மேலாளராகப் பணியாற்றிய பி.டி. செல்வகுமார், சமீபத்தில் திமுகவில் இணைந்த நிலையில் விஜய்யைப் பற்றி பல அதிரடி புகார்களைத் தெரிவித்துள்ளார்.

விஜய்யின் வளர்ச்சிக்கும், அவரது மக்கள் இயக்கத்தைக் கட்டமைப்பதற்கும் தான் கடுமையாக உழைத்ததாகவும், ஆனால் தனக்கு உடல்நிலை சரியில்லாத போதோ அல்லது ‘புலி’ பட வெளியீட்டின் போது வருமான வரிச் சோதனை நடந்த போதோ விஜய் தனக்கு உதவி செய்யாமல் கைவிட்டுவிட்டதாகவும் அவர் வேதனையுடன் கூறியுள்ளார்.

விஜய்யைச் சுற்றியிருக்கும் ஒரு சதிக்கூட்டம்தான் தன்னையும், விஜய்யின் தந்தையையும் அவரிடமிருந்து பிரித்ததாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், விஜய் எப்போதுமே தனது பாதுகாப்பை மட்டுமே பார்ப்பார் என்றும், ஒரு பிரச்சனை என்று வந்தால் அவர் தைரியமாக நிற்காமல் அழுதுவிடுவார் என்றும் செல்வகுமார் விமர்சித்துள்ளார்.

‘தலைவா’ படப் பிரச்சனையின் போது ஜெயலலிதாவிடமும், ‘போக்கிரி’ படப் பிரச்சனையின் போது கருணாநிதியிடமும் விஜய் உதவி கேட்டு நின்றதை அவர் உதாரணமாகக் காட்டினார்.

கடந்த தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட்ட பி.டி. செல்வகுமார், தற்போது திமுகவில் இணைந்துள்ள நிலையில், வரும் சட்டமன்ற தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு தேடி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.