நடிகை த்ரிஷாவை வீட்டை விட்டு வெளியே அனுப்பாமல் இருப்பது நல்லது என நடிகர் பார்த்திபன் தெரிவித்துள்ள கருத்து பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.
விருது வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் பார்த்திபனிடம் நடிகை த்ரிஷாவின் புகைப்படத்தைக் காட்டி ஒரு கவிதை சொல்லுமாறு தெரிவிக்கப்பட்டது. பொன்னியின் செல்வனில் த்ரிஷா நடித்த குந்தவை கேரக்டரை குறிப்பிட்டு என்ன சொல்லப் போகிறீர்கள் என கேட்கப்பட்டது. அதற்கு பார்த்திபன், “இந்த குந்தவையை கொஞ்சம் நேரம் குந்தவைப்பது நல்லது. இந்த குந்தவையை வீட்டுக்குள்ளே குந்தவைத்து விட்டு வெளியே அனுப்பாமல் இருப்பது ரொம்ப நல்லது. நிறைய பிரச்னைகளை உருவாக்காமல் இருந்ததற்காக இதனை சொல்கிறேன். சில கவிதைகளை ரசிக்கலாம். அதனை சொல்லாமல் இருப்பதே சிறந்தது" என தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து பார்த்திபனுக்கு, த்ரிஷா ரசிகர்கள் மற்றும் இணையவாசிகள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான விஜய் மற்றும் த்ரிஷா தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளனர். விஜய் மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்த நிலையில் அதில் நடிகை ஒருவருடன் தகாத உறவு விஜய்க்கு இருப்பதாக சொல்லப்பட்டிருந்தது. அந்த நடிகை பெயரை குறிப்பிடவில்லை என்றாலும் அது த்ரிஷா தான் பலரும் தெரிவித்து வருகின்றனர். இதனை மேலும் சர்ச்சையாக்கும் வகையில் அண்மையில் நடந்த ஏஜிஎஸ் நிறுவனத்தின் குடும்ப விழாவில் ஒரே காரில் ஒரே நிறை ஆடை அணிந்து விஜய் மற்றும் த்ரிஷா இணைந்து வருகை தந்தனர்.
இதனைக் கண்டு தமிழக வெற்றிக் கழக தொண்டர்களே அதிர்ச்சியடைந்தனர். சங்கீதா சொல்வது போல விஜய் உண்மையை ஒப்புக்கொள்கிறாரா அல்லது நாங்கள் நண்பர்கள் தான், வெளிப்படையாக எதுவும் இல்லை என கூறுகிறாரா என்ற குழப்பம் ஏற்பட்டது. அதேசமயம் விஜய்க்கு ஈகோ தலைக்கு மேல் ஏறி விட்டதால் சங்கீதாவை வெறுப்பேற்ற இப்படியெல்லாம் செய்கிறார் எனவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
Thalapathy Vijay said:
— Actor Vijay Team (@ActorVijayTeam) March 7, 2026
I see many of you getting hurt over these current issues. When I see that, it hurts me too. I will take care of it.
Let us focus only on the people’s problems together. pic.twitter.com/tY0QsqZ5lb
இந்த நிலையில் மார்ச் 7ம் தேதி மாமல்லபுரத்தில் நடைபெற்ற தவெக மகளிர் தின விழாவில் விவாகரத்து சம்பவம் குறித்து மறைமுகமாக விஜய் பதிலளித்தார். அந்த விஷயத்தை நான் பார்த்துக் கொள்வதாகவும், யாரும் வருத்தப்பட வேண்டாம். மக்கள் பிரச்னையை சேர்த்து பார்க்கலாம் எனவும் தொண்டர்களுக்கு அறிவுரை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.