திமுக ஆட்சி அமைந்தது முதலே தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு சீர்கெட்டு விட்டதாக, அதிமுக மற்றும் பாஜக உள்ள எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. அண்மையில் கூட நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே பெரும்பத்து கிராமத்தில் குறிப்பிட்ட சமூகத்தினரை குறிவைத்து ஒரு கும்பல் கொடூரமாக தாக்குதல் நடத்தியது. அதில் 2 பேர் உயிரிழந்த நிலையில், பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 9 பேரும், 19 முதல் 23 வயதுக்குட்பட்டவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.
போதைப்பொருள் பயன்பாடு மற்று இளைஞர்கள் கொலை போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவது அதிகரித்து வருவது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சட்ட-ஒழுங்கு குறைபாட்டை திமுகவிற்கு எதிரான ஆயுதமாக எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் பயன்படுத்தவும் எதிர்க்கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.