அதிமுகவில் ஜெயலலிதா இல்லாத நிலையில் எடப்பாடி பழனிச்சாமி இரண்டாவது சட்டமன்ற தேர்தலை சந்திக்கவுள்ளார். 2021 சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தார் எடப்பாடி பழனிச்சாமி. ஆனால் அந்த தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்தது. திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.. முக ஸ்டாலின் முதல்வர் பதவியில் அமர்ந்தார்.
இந்த முறை எப்படியாவது திமுகவை தோற்கடித்து நாம் முதல்வராக அமர வேண்டும் என்கிற எண்ணத்தில் இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி பாஜக, பாமக உள்ளிட்ட சில கட்சிகளை தனது கூட்டணியில் இணைத்துள்ளார். அந்த கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சு வார்த்தையில் இழுபறி நீடித்துவந்த நிலையில் நேற்று பாஜக மேலிடப் பொறுப்பாளர் பியூஷ் கோயல் சென்னை வந்து கூட்டணி தலைவர்கள் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்..
அதன்பின் பாஜகவுக்கு 27, அன்புமணியின் தலைமையிலான பாமகவுக்கு 18, டிடிவி தினகரனின் அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்குவது என முடிவு செய்யப்பட்டது. மற்ற சின்ன கட்சிகளுக்கு விரைவில் தொகுதி பங்கீடு அறிவிக்கப்படவுள்ளது. இந்நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சென்னையில் நாளை முதல் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார். கபாலிஸ்வரர் கோவிலில் வழிபாடு நடத்திவிட்டு மயிலாப்பூர் தொகுதியில் அவர் முதல் பரப்பரை மேற்கொள்கிறார்..