“அமமுக-வுக்கு விழுந்த மரண அடி” திமுகவில் இணைந்த முக்கிய புள்ளி…. டிடிவி தினகரனை தவிக்க விட்ட அந்த ஒரு முடிவு….!!
SeithiSolai Tamil March 27, 2026 09:48 AM

தமிழக அரசியல் களத்தில், குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் அமமுகவுக்கு மிகப்பெரிய பலமாகத் திகழ்ந்த தஞ்சாவூர் ரெங்கசாமி, தற்போது திமுகவில் இணைந்துள்ளது டிடிவி தினகரனுக்குப் பேரிடியாக அமைந்துள்ளது. அமமுகவின் துணைப் பொதுச்செயலாளர் மற்றும் அக்கட்சியின் ‘டெல்டா முகம்’ என அறியப்பட்ட இவர், டிடிவி தினகரனின் வலதுகரமாகவே செயல்பட்டு வந்தார்.

ஆனால், தற்போது அமைந்துள்ள என்டிஏ கூட்டணியில் அமமுகவுக்குத் தஞ்சாவூர் தொகுதி ஒதுக்கப்படாதது, ரெங்கசாமி தரப்பை கடும் அதிருப்தியில் ஆழ்த்தியது. தனக்குக் கிடைக்க வேண்டிய வாய்ப்பு தட்டிப் பறிக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த அவர், அதிரடியாக அக்கட்சியிலிருந்து விலகும் முடிவை எடுத்தார்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் இன்று தன்னை திமுகவில் ஐக்கியப்படுத்திக் கொண்ட ரெங்கசாமியின் இந்த முடிவு, வரும் தேர்தலில் டெல்டா பகுதிகளில் அமமுகவின் செல்வாக்கைச் சிதைக்கும் எனக் கருதப்படுகிறது. “கூட்டணியில் நமக்கு மதிப்பு இல்லையா?” என்ற கேள்வியோடு வெளியேறிய இவரை, திமுக தலைமை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்றுள்ளது.

தேர்தல் நெருங்கும் நேரத்தில், தன் நம்பிக்கைக்குரிய தளபதி ஒருவரை திமுகவிடம் பறிகொடுத்திருப்பது டிடிவி தினகரனுக்குத் தாங்க முடியாத அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. இந்தத் திடீர் அரசியல் மாற்றம் தஞ்சாவூர் அரசியலில் புதிய புயலைக் கிளப்பியுள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.