தன்னுடைய பிரச்சனையை கூட எழுதி படிக்கிற ஒரே ஆள் விஜய்தான்!. நெட்டிசன்கள் ட்ரோல்!..
WEBDUNIA TAMIL April 02, 2026 09:48 PM


தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் சென்னை பெரம்பூர் தொகுதி மட்டுமின்றி திருச்சி கிழக்கு தொகுதியிலும் போட்டியிடுகிறார். இதனையடுத்து இன்று காலை சென்னையிலிருந்து விமான மூலம் திருச்சி வந்தார் விஜய். அதன்பின், திருச்சியில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் வேட்புமனுவை தாக்கல் செய்தார். அதன்பின் திருச்சியில் விஜய் பிரச்சாரம் செய்தார். அப்போது வழக்கம் போல் திமுகவை விமர்சித்து பேசினார்..

அப்போது ‘ஜனநாயகன் படத்தை வெளிவிடாமல் செய்தது ஒரு கூட்டு சதி.. எங்கே எனக்கும் உங்களுக்கும் எடுக்கும் இடையே உள்ள அன்பு மேலும் நெருக்கமாகி விடுமோ என்பதாலும், ஜனநாயகன் படம் இந்த தேர்தலில் நமக்கு மிகப்பெரிய ஆயுதமாக மாறிவிடுமோ என பயந்து சிலர் செய்த கூட்டு செய்தியால்தன் அந்த படம் வெளியாகவில்லை’ என விஜய் ஒரு பேப்பரை பார்த்து படித்தார்.

அந்த வீடியோவை பலரும் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து ‘தன்னுடைய பிரச்சனையை கூட எழுதி வைத்து படிக்கும் ஒரே தமிழக அரசியல்வாதி விஜய் மட்டும்தான்’ என அவரை ட்ரோல் செய்து வருகிறார்கள்..
© Copyright @2026 LIDEA. All Rights Reserved.