கேரளம் மாநிலத்தின் ஆலப்புழாவிலிருந்து தன்பாத் நோக்கி பாய்ந்து சென்ற விரைவு ரெயிலில் எதிர்பாராத சம்பவம் ஒன்று மகிழ்ச்சியான தருணமாக மாறியது.
ஆந்திரப் பிரதேசத்தின் அன்னாவரம் ரெயில் நிலையத்தை அண்மித்த பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, பி.1 பெட்டியில் பயணம் செய்த கர்ப்பிணி பெண்ணுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.

பயணிகள் மத்தியில் பரபரப்பு நிலவிய அந்த தருணத்தில், ரெயில்வே ஊழியர்கள் விரைவாக செயல்பட்டு, அவசர உதவிகளை செய்து பாதுகாப்பான பிரசவத்திற்கு துணைநின்றனர்.
அவர்களின் துரிதமான உதவியால், அந்த பெண்ணுக்கு ஆரோக்கியமான பெண் குழந்தை பிறந்தது. மகிழ்ச்சியால் நிரம்பிய அந்த நொடியில், ரெயில் அடுத்ததாக வரவிருந்த எலமஞ்சிலி ரெயில் நிலையத்தில் சிறப்பு நிறுத்தம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அங்கு அரசின் ஆம்புலன்ஸ் உடனடியாக அழைக்கப்பட்டு, தாயும் புதிதாக பிறந்த குழந்தையும் பாதுகாப்பாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.