“நடுவர்களிடமே வம்பு செய்தாரா டிம் டேவிட்..?” மைதானத்தில் நடந்த மோதல்.. பறிபோன லட்சக்கணக்கான பணம்.. போட்டி கட்டணத்தில் 25% அபராதம்..!!
SeithiSolai Tamil April 15, 2026 02:48 PM

மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த ஐபிஎல் லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி தனது 3-வது வெற்றியைப் பதிவு செய்தது. முதலில் ஆடிய பெங்களூரு அணி, பில் சால்ட், விராட் கோலி மற்றும் கேப்டன் ரஜத் படிதார் ஆகியோரின் அதிரடி அரைசதங்களால் 240 ரன்களுக்கு மேல் குவித்தது.

கடினமான இலக்கை நோக்கி ஆடிய மும்பை அணி 20 ஓவர்களில் 222 ரன்கள் மட்டுமே எடுத்துத் தோல்வியைத் தழுவியது.இந்த ஆட்டத்தின் போது பெங்களூரு அணியின் அதிரடி ஆட்டக்காரர் டிம் டேவிட் விதிகளுக்கு மாறாக நடந்து கொண்டதால் அபராதத்தில் சிக்கினார்.

போட்டியின் 18-வது ஓவரில் பந்து மாற்றப்பட்ட போது, அந்தப் பந்தை ஆய்வு செய்ய நடுவர்கள் அனுமதிக்காத நிலையிலும், அதைத் தர மறுத்து டிம் டேவிட் பரிசோதித்துக் கொண்டிருந்தார். நடுவர்களின் உத்தரவை மீறி செயல்பட்டதால், அவருக்குப் போட்டி கட்டணத்திலிருந்து 25 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டதுடன், தகுதியிழப்புப் புள்ளிகளும் வழங்கப்பட்டுள்ளன.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.