தமிழ்நாடு முழுவதும் உள்ள 234 தொகுதிகளுக்கும் நாளை ஒரே கட்டமாக தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்காக சென்னை தலைமை செயலகத்தில் அனைத்து மாவட்ட வாக்குச் சாவடிகளையும் கண்காணிக்கும் வகையில் உயர் சிறப்பு கண்காணிப்பு தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று மாநிலம் முழுவதும் 75,000 வாக்குச்சாவடிகளில் 1,50,128 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, அனைத்தும் ஒரே இடத்தில் கண்காணிக்க பிரத்யேக அறை அமைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;
ஊடகக் கண்காணிப்புக் கட்டுப்பாட்டு அறை:
மாநில ஊடகக் கட்டுப்பாட்டு அறையானது 2 மாவட்ட வருவாய் அலுவலர்கள் (DROs) மற்றும் 2 துணை ஆட்சியர்கள் உட்பட 15 பேர் கொண்ட குழுவுடன் இயங்கி வருகிறது. இந்தக் குழுவினர் அச்சு ஊடகம், மின்னணு ஊடகம் மற்றும் சமூக ஊடகத் தளங்களைக் கண்காணித்து. தேர்தல் நடத்தை விதிகள் (MCC) மீறல். எதிர்மறையான அல்லது தவறான செய்திகள், வெறுப்புப் பேச்சு, கட்டணச் செய்திகள் (Pald News) மற்றும் பிற ஆட்சேபனைக்குரிய உள்ளடக்கங்கள் குறித்துக் கண்காணிக்கின்றனர். அவற்றைச் சரிபார்த்து, தேவையான நடவடிக்கைக்காக ஊடகக் काली (Media Tracker) இணையதளம் வழியாக சம்பந்தப்பட்ட மாவட்டங்களுக்கு உடனடியாகத் தெரிவிக்கின்றனர். இன்று வரை, 437 சமூக ஊடகப் புகார்கள், 129 அச்சு ஊடகப் புகார்கள் மற்றும் 100 மின்னணு ஊடகப் புகார்கள் பெறப்பட்டு தீர்வு காணப்பட்டுள்ளன.
வாகனக் கண்காணிப்பு மற்றும் cVIGIL புகார்களுக்கான 24X7 ஜிபிஎஸ் (GPS) கட்டுப்பாட்டு அறை:
இரண்டு மாவட்ட வருவாய் அலுவலர்கள் தலைமையில் 30 நபர்களைக் கொண்ட குழுவுடன் கூடிய இணையவழி நேரடி கண்காணிப்புக் கட்டுப்பாட்டு அறை, பறக்கும் படை வாகனங்கள் / நிலையான கண்காணிப்புக் குழுக்களின் வாகனங்கள், காணொளி கண்காணிப்புக் குழு வாகனங்கள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM)/ வாக்காளர் தாம் அளித்த வாக்கினை சரி பார்க்கும் கருவிகள் (VVPAT) கொண்டு செல்லும் வாகனங்கள் மற்றும் மண்டலக் குழு வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள ஜிபிஎஸ் (GPS) அடிப்படையிலான வாகனக் கண்காணிப்பு அமைப்பை கண்காணிக்கவும், சிவிஜில் (cVIGIL) புகார்களைக் கண்காணிக்கவும் 15.03.2026 முதல் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. மேலும், மாவட்டங்களில் தேர்தல் செலவினக் கண்காணிப்பு தொடர்பான சந்தேகங்களைத் தீர்க்கவும் இந்த அறை செயல்படுகிறது. 21.04.2026 நிலவரப்படி, 5859 புகார்கள் பெறப்பட்டு அவை முடித்து வைக்கப்பட்டுள்ளன.
மாநிலத் தொடர்பு மையம் (SCC):
மாநிலத் தொடர்பு மையம் (24 X 7) 30 பேர் கொண்ட குழுவுடன் 180042521950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் மூலம் புகார்களைப் பெற இயங்கி வருகிறது. இதேபோன்ற அமைப்பு மாவட்டங்களில் "மாவட்டத் தொடர்பு மையம் 1950" என்ற பெயரில் கட்டணமில்லா தொலைபேசி எண் (மாவட்ட எஸ்.டி.டி குறியீட்டுடன் சேர்த்து) 1950 ல் இயங்குகிறது. இதுவரை சுமார் 21657 புகார்கள் பெறப்பட்டு தீர்வு காணப்பட்டுள்ளன.
தலைமைத் தேர்தல் அதிகாரி (CEO) அலுவலகக் கட்டுப்பாட்டு அறை:
முதன்மை கட்டுப்பாட்டு அறை 20.04.2026 முதல் 18 மாவட்ட வருவாய் அலுவலர்கள் மற்றும் அவர்களது குழுவினருடன் தேர்தல் பணிகளுக்காகச் செயல்படத் தொடங்கியுள்ளது. இவர்கள் 75064 வாக்குச் சாவடிகளில் செய்யப்பட்டுள்ள நேரடி இணைய ஒளிபரப்பு (Live Webcasting) ஏற்பாடுகள் மூலம் (வாக்குச் சாவடிக்கு உள்ளே 1 மற்றும் வெளியே என மொத்தம் 1,50,128 காணொலிக் கருவி) தேர்தல் நாள் நடவடிக்கைகளைக் கண்காணிப்பார்கள். மேலும், மாவட்டங்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு, மாவட்டத் தேர்தல் அலுவலர்கள் / தேர்தல் நடத்தும் அலுவலர்களிடமிருந்து அறிக்கைகளைப் பெறுவார்கள் என கூறப்பட்டுள்ளது.