ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியைச் சேர்ந்த 7 வயது சிறுவன் இஷாங்க் சிங் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே உள்ள பாக் ஜலசந்தியில் (Palk Strait) 29 கிலோமீட்டர் நீந்தி புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
7 வயது இஷாங்க் சிங் இலங்கையின் தலைமன்னாரில் நீந்தத் தொடங்கி இந்தியாவின் தனுஷ்கோடிக்கு வந்து சேர்ந்தார். ஆச்சரியம் என்னவென்றால், அவர் இந்த தூரத்தை 9 மணி 50 நிமிடங்களில் கடந்தார். ராஞ்சியின் துருவாவில் வசிக்கும் இஷாங்க் இந்த சாதனையை ஏப்ரல் 30 ஆம் தேதி படைத்தார்.
7 வயது இஷாங்க் சிங், பாக் ஜலசந்தி பாதையை கடந்த உலகின் இளம் நீச்சல் வீரர் ஆனார். இது ஒரு உலக சாதனையாக மாறியுள்ளது. இந்த பாதையை கடப்பது மிகவும் கடினம். ஏனெனில் இங்கு கடலில் பெரிய அலைகளும், தண்ணீரில் வேகமான நீரோட்டமும் இருக்கும். இருந்தபோதிலும், இஷாங்க் 9 நிமிடம் 50 நிமிடங்களில் இந்த தூரத்தை கடந்தார்.
இந்த சாதனையை அங்கீகரிக்கும் வகையில், இஷாங்க் சிங்குக்கு யுனிவர்சல் ரெக்கார்ட்ஸ் மன்றம் (URF) 'இளம் மற்றும் அதிவேக பாக் ஜலசந்தி நீச்சல் வீரர்' என்ற விருதை வழங்கியுள்ளது. பயிற்சியாளர் அமன் குமார் ஜெய்ஸ்வால் மற்றும் பஜ்ரங் குமார் ஆகியோர் இந்த கடினமான சவாலுக்காக இஷாங்கை தயார்படுத்தினர். 29 கிலோமீட்டர் நீந்துவதற்கு தேவையான சகிப்புத்தன்மையை பெற, இஷாங்க் தினமும் 4-5 மணி நேரம் பயிற்சி செய்ததாக கூறப்படுகிறது.
இஷாங்க் சிங் ராஞ்சியில் உள்ள டிஏவி ஷ்யாமலி பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கிறார். இந்த தனித்துவமான சாதனையை அங்கீகரிக்கும் வகையில் பள்ளி அவருக்கு கௌரவித்தது. ஜார்கண்ட் மக்கள் மட்டுமல்ல, நாடு முழுவதும் இஷாங்கை வாழ்த்தி வருகின்றனர்.