சனாதன தர்மம் குறித்த சர்ச்சை… உதயநிதி ஸ்டாலினிடம் விளக்கம்… கோரும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா… யாரும் எதிர்பார்க்காத திருப்பம்…!!!
SeithiSolai Tamil May 15, 2026 04:48 PM

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசியது பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, உதயநிதி ஸ்டாலினுக்கு சனாதன தர்மம் குறித்த புரிதல் இல்லை என்று விமர்சித்துள்ளார்.

மேலும் வட இந்தியாவில் சனாதன தர்மம் என்பது இந்து மதத்தைக் குறிப்பதாகவும், ஆனால் தமிழகத்தில் அது சமத்துவமின்மையையே அடையாளப்படுத்துவதாகவும் அவர் விளக்கமளித்தார். எனவே, இந்த விவகாரத்தில் உதயநிதி ஸ்டாலின் தனது கருத்தை தெளிவுபடுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

இதனால் நாங்கள் எந்த மதத்திற்கும் எதிரானவர்கள் அல்ல என்றும், அனைத்து மதத்தினரையும் சமமாகவே நடத்துவதாகவும் தெரிவித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, தாங்கள் ‘இந்துத்துவா’ கொள்கைக்கு மட்டுமே எதிரானவர்கள் என்று குறிப்பிட்டார்.

இந்நிலையில் ஒரு குறிப்பிட்ட மதத்தை மற்றவர்கள் மீது திணிப்பதே இந்துத்துவா என்றும், தமிழகத்தின் அடிப்படை தத்துவமே சமத்துவம்தான் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். மேலும், தனிப்பட்ட முறையில் தனக்குக் கடவுள் நம்பிக்கை இல்லையென்றாலும், ஒரு அமைச்சராக அனைத்து நம்பிக்கைகளுக்கும் மரியாதை அளிக்க வேண்டியது தனது கடமை என்று அவர் தனது உரையில் பதிவு செய்துள்ளார்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.