100 மீட்டர் ஓட்டத்தை 10.09 வினாடிகளில் கடந்து குரிந்தர்வீர் சிங் சரித்திர சாதனை.. குவியும் வாழ்த்துகள்!
Dinamaalai May 24, 2026 03:48 PM

இந்தியத் தடகள விளையாட்டு உலகமே வியந்து பார்க்கும் வகையிலான ஒரு பிரம்மாண்ட வரலாற்றுச் சாதனை ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் அரங்கேறியுள்ளது. அங்கு நடைபெற்று வரும் 2026-ஆம் ஆண்டிற்கான தேசிய தடகள கூட்டமைப்பு கோப்பை தொடரில், ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த அதிவேக புயல் குரிந்தர்வீர் சிங் தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.

இப்போட்டியில் இலக்கை வெறும் 10.09 வினாடிகளில் கடந்து, இந்தியத் தடகள வரலாற்றிலேயே 10.10 வினாடிகளுக்கும் குறைவான நேரத்தில் ஓடி முடித்த முதல் இந்திய வீரர் என்ற இமாலய தேசிய சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார். ராஞ்சியில் உள்ள புகழ்பெற்ற பிர்சா முண்டா மைதானத்தில் நடைபெற்ற இந்த 100 மீட்டர் இறுதிப்போட்டி, ரசிகர்களிடையே அசாத்திய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. பந்தயம் தொடங்கிய அடுத்த சில நொடக்ளிலேயே, மின்னல் வேகத்தில் சீறிப்பாய்ந்த பஞ்சாபின் 25 வயது இளம் தடகள வீரர் குரிந்தர்வீர் சிங், பந்தய தூரத்தை மிகத் துல்லியமாக 10.09 வினாடிகளில் கடந்து முதலிடத்தைப் பிடித்தார்.

View this post on Instagram

A post shared by News18 Tamil Nadu (@news18tamilnadu)