ஐபிஎல் 2026 சீசனில் (IPL 2026) நேற்று அதாவது 2026 மே 23ம் தேதி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முன்னதாக, ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வந்த அர்ஜூன் டெண்டுல்கர், பின்னர் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (Lucknow Super Giants) அணியில் சேர்ந்தார். ஆனால் லீக் சுற்றின் 13 போட்டிகளில் அர்ஜுன் டெண்டுல்ககர் பெஞ்சில் அமர வேண்டியிருந்தது. சீசனின் கடைசிப் போட்டியில் அர்ஜுன் டெண்டுல்கருக்கு விளையாட வாய்ப்பு கிடைத்தது. பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், அர்ஜுன் டெண்டுல்கர் தனது ஆட்டத்தால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக அறிமுகமான அர்ஜுன் டெண்டுல்கர், 4 ஓவர்களில் 36 ரன்களுக்கு ஒரு விக்கெட் எடுத்தார். அதில், பிரப்சிம்ரன் சிங்கை ஆட்டமிழக்கச் செய்தார். இதுமட்டுமின்றி, அர்ஜுன் டெண்டுல்கர் ஃபீல்டிங் செய்யும்போதும் ஒரு கேட்சைப் பிடித்தார். பேட்டிங்கில் 5 பந்துகளில் 5 ரன்கள் எடுத்தார்.
ALSO READ: வெளியேறிய டெல்லி.. ஒரு இடத்திற்கு 3 அணிகள்.. RR, KKR, PBKS பிளே ஆஃப் கணக்குகள்..!
சச்சின் டெண்டுல்கர் போஸ்ட்:Well done, Arjun. ❤️
Proud of the way you’ve carried yourself through this season, always believing in your ability, staying patient, working hard quietly, and remaining positive despite having to wait for your opportunity till the very last match.
Cricket tests patience as much… pic.twitter.com/3RdiGkXbfT— Sachin Tendulkar (@sachin_rt)
அர்ஜுன் டெண்டுல்கரின் ஆட்டத்திற்குப் பிறகு, சச்சின் சமூக வலைதளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். சச்சின் டெண்டுல்கர் எழுதியதாவது, ”நன்றாகச் செய்தாய், அர்ஜுன். இந்த சீசன் முழுவதும் நீ உன்னைக் கையாண்ட விதத்தைக் கண்டு நான் பெருமைப்படுகிறேன். உன் திறமைகளின் மீது நம்பிக்கை வைத்து, அமைதியாகப் பணியாற்றி, நிதானத்தைக் கடைப்பிடித்து, கடைசிப் போட்டி வரை ஒரு வாய்ப்புக்காகக் காத்திருந்த பிறகும் நேர்மறையாக இருந்தாய். கிரிக்கெட் திறமையை மட்டுமல்ல, பொறுமையையும் சோதிக்கிறது, நீ இந்த இரண்டையும் அற்புதமாகக் கையாண்டாய். எப்போதும் உன் கால்களைத் தரையில் ஊன்றி, விளையாட்டை நேசி. என்றும் அன்புடன்.” என்று தெரிவித்தார்.
அர்ஜுனின் கிரிக்கெட் வாழ்க்கையில் சச்சின் டெண்டுல்கர் அரிதாகவே சமூக வலைதளங்களில் பதிவிடுவார். முன்னதாக, கடந்த 2023ம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அர்ஜுன் ஐபிஎல்-லில் அறிமுகமானபோது சச்சின் பதிவிட்டிருந்தார். தனது தம்பியின் கிரிக்கெட் பயணத்தை கண்டு சாரா டெண்டுல்கர் தனது மகிழ்ச்சியை அடக்க முடியவில்லை. தனது சகோதரனின் சிறப்பான ஆட்டம் குறித்து சாரா டெண்டுல்கர், “இந்த உலகில் உள்ள அனைத்து மகிழ்ச்சிக்கும் நீ தகுதியானவன். நாங்கள் உன்னை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறோம்” என்று எழுதினார்.
ALSO READ: ஷ்ரேயாஸ் சதம்! பிளே ஆஃப் வாய்ப்பை தக்க வைத்த பஞ்சாப்.. லக்னோவை வீழ்த்தி அசத்தல்..!
ஐபிஎல்லில் அர்ஜுன் டெண்டுல்கர்:கடந்த 2021ம் ஆண்டு அர்ஜுன் டெண்டுல்கரை மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியது. அப்போது அவருக்காக 20 லட்சம் ரூபாய் செலவு செய்தது. அதன்பிறகு, அர்ஜுன் டெண்டுல்கர் கடந்த 2023ம் ஆண்டில் தனது முதல் போட்டியில் விளையாடினார். ஐபிஎல் 2023 சீசனில், அர்ஜுன் டெண்டுல்கர் 4 போட்டிகளில் 3 விக்கெட்டுகளை எடுத்தார். அர்ஜுன் டெண்டுல்கர் 2021 முதல் 2025 வரை மும்பை இந்தியன்ஸ் அணியில் அங்கம் வகித்தார். 2026-ல், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி அர்ஜுன் டெண்டுல்கரை மும்பை இந்தியன்ஸ் அணியிடமிருந்து 30 லட்சத்திற்கு வர்த்தகம் செய்தது. இதுவரை, அர்ஜுன் ஐபிஎல்-ல் 1 கோடியே 70 லட்சம் ரூபாய் சம்பாதித்துள்ளார்.