22 வயசு தான்... பிரபல சின்னத்திரை நடிகை தூக்கிட்டு தற்கொலை... ரசிகர்கள் அதிர்ச்சி!
Dinamaalai June 15, 2026 09:48 PM

மகாராஷ்டிர மாநிலம் மும்பை அருகே உள்ள பால்கர் மாவட்டத்தின் நல்லாசோபரா பகுதியில் வசித்து வந்த 22 வயது இளம் தொலைக்காட்சி நடிகை சஞ்சிதா உகலே நேற்று இரவு தனது இல்லத்தில் மர்மமான முறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். 'கும்ம்கும் பாக்யா' மற்றும் 'வாக்லே கி துனியா' போன்ற மிகவும் புகழ்பெற்ற சின்னத்திரை தொடர்களில் நடித்ததன் மூலம் அவர் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் பிரபல்யத்தையும் பெற்றிருந்தார். நேற்று இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் இந்த விபரீத முடிவைத் தேடிக்கொண்டதாகத் தற்பொழுது முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.

View this post on Instagram

A post shared by India Today (@indiatoday)