அரண்மனையில் மெகா திருமண ஏற்பாடுகள் ... காதலனுடன் சேர்ந்து வருங்காலக் கணவரை கோட்டைப் பள்ளத்தாக்கில் தள்ளிப் படுகொலை செய்த இளம்பெண்!
Dinamaalai June 24, 2026 01:48 AM

மகாராஷ்டிர மாநிலத்தின் புனே மாவட்டத்தைச் சேர்ந்த 26 வயது இளம் தொழிலதிபர் கேதன் விஷால் அகர்வால் என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த 20 வயது இளம்பெண் சியா கோயல் என்பவருக்கும் வரும் நவம்பர் மாதத்தில் மிக பிரம்மாண்டமாகத் திருமணம் நடத்த இருவீட்டாரும் முடிவு செய்திருந்தனர். சுமார் 17 கோடி ரூபாய் செலவில் ஆடம்பர அரண்மனையில் இந்த மெகா திருமணத்தை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மிக விறுவிறுப்பாக நடந்து வந்துள்ளன. இப்படியிருக்கையில், வருங்காலக் கணவரான கேதனைப் பள்ளத்தாக்கில் தள்ளிப் படுகொலை செய்ததாக அவரது வருங்கால மனைவி சியா கோயல் மற்றும் அவரது கள்ளக்காதலன் சேதன் சவுத்ரி ஆகிய இருவரையும் போலிசார் கைது செய்துள்ளனர்.

கொல்லப்பட்ட தொழிலதிபர் கேதன் விஷால் அகர்வால் தனது குடும்பத்திற்குச் சொந்தமான ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் இயக்குநராகப் பணியாற்றி வந்துள்ளார். திருமணத்திற்கு முன்பாகத் தனது வருங்கால மனைவியின் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக மகாபலேஷ்வர் பகுதியில் உள்ள ஒரு ஆடம்பர விடுதியில் 40 அறைகளைக் கேதன் முன்கூட்டியே பதிவு செய்திருந்தார். அத்துடன் தங்களது திருமணத்திற்கு முந்தைய புகைப்படப் பதிவிற்காகக் கடந்த ஜூன் 18 அன்று புனேயில் உள்ள லோஹகாட் கோட்டைப் பகுதிக்குச் சியா கோயலுடன் கேதன் தனியாகச் சென்றுள்ளார்.

அங்கு சென்ற இடத்தில் சியா கோயல் தனது 22 வயது காதலன் சேதன் சவுத்ரியுடன் சேர்ந்து, கேதனை 400 அடி ஆழமுள்ள ஒரு பயங்கரமான பள்ளத்தாக்கில் திடீரெனத் தள்ளிவிட்டுக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார். பின்னர் இது ஏதோ எதிர்பாராத விபத்து மரணம் எனப் போலிசாரை நம்ப வைக்க நாடகமாடியுள்ளனர். எனினும் போலிசாரின் தீவிர விசாரணையில், சியா கோயல் தனது காதலனுடன் இணைந்து கேதனைத் தீர்த்துக் கட்டிய அசல் உண்மை விபரம் தற்பொழுது வெளிவந்து நுகர்வோர் பொதுமக்கள் மத்தியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.