வந்துட்டே இருக்கேன்...வந்துட்டே இருக்கேன்...விசாரணை அலைச்சலில் கடுப்பான சூரி
ராகேஷ் தாரா June 28, 2026 01:14 AM

நடிகர் சூரியின் நிலப்பிரச்சனை வழக்கு விசாரணையில் இருந்து வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக இன்று சென்னை வெப்பேரி காவல் நிலையத்தில் விசாரணைக்கு அவர் ஆஜரான . செய்தியாளர்களையும் பேசிய சூரி இதுவரை 4 ஆவது முறையாக தான் விசாரணைக்கு வந்துபோவதாக தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். 

அதிருப்தியை வெளிக்காட்டிய சூரி 

சூரி பேசியபோது " நிலப்பிரச்சனை தொடர்பான விசாரணைக்காக வந்தேன். அதற்காக தான் முன்பு ஒரு முறை வந்தேன். மறுபடியும் வந்திருக்கேன். இப்படியே வந்துகொண்டேதான் இருக்கிறேன். முன்பெல்லாம் வீட்டை விட்டு வெளியே போனால் எங்கப்பா ஷூட்டிங் என்று கேட்பார்கள். ஆனால் இப்போது எங்கப்பா போலீஸ் ஸ்டேஷனுக்கானு கேட்கிறார்கள். வேப்பேரி ஸ்டேஷன் தான் கனவுல வருது. கடவுள் இருக்கிறார். நியாயம் கிடைக்கும் என்கிற நம்பிக்கையில் தான் இருக்கிறேன். முடிவு எனக்கு சாதகமாக வரக்கூடாது நியாயமாக இருக்கனும் என்று நினைக்கிறேன். நான் சட்டத்தை நம்பியிருக்கிறேன். கடவுளை நம்பியிருக்கிறேன். " என்று பேசினார். 

சூரி நிலப்பிரச்சனை பின்னணி 

சூரி தொடர்பான இந்த நில விவகாரம் கடந்த 2015ஆம் ஆண்டு தொடங்கியது. சென்னை சிறுசேரி பகுதியில் சுமார் 1.82 ஏக்கர் நிலத்தை ரூ.5.75 கோடிக்கு அவர் வாங்கியதாக கூறப்படுகிறது. இந்த நிலத்தை வாங்குவதற்கு முன்னாள் காவல்துறை அதிகாரியும் நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தையுமான ரமேஷ் குடவாலா மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் அன்பு வேல்ராஜன் ஆகியோர் அறிமுகப்படுத்தியதாக தகவல்கள் வெளியாகின.

ஆனால், நிலத்தை வாங்கிய பிறகே அதன் உண்மையான மதிப்பை விட அதிக தொகைக்கு விற்பனை செய்யப்பட்டதாகவும், நிலத்திற்கு உரிய அணுகுமுறை சாலை உள்ளிட்ட பல சட்டரீதியான சிக்கல்கள் இருப்பதாகவும் சூரிக்கு தெரியவந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, தன்னை திட்டமிட்டு ஏமாற்றியதாக குற்றம்சாட்டி அவர் காவல்துறையில் புகார் அளித்தார்.

இந்தப் புகாரின் அடிப்படையில் மோசடி, போலி ஆவணங்கள் மற்றும் நில அபகரிப்பு தொடர்பான பல்வேறு பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியது. பல ஆண்டுகளாக இந்த வழக்கு காவல்துறை விசாரணை மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளில் இருந்து வரும் நிலையில், அவ்வப்போது சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வழக்கின் தொடர்ச்சியாகவே இன்று நடிகர் சூரி சென்னை வெப்பேரி காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜரானார். விசாரணை முடிந்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இந்த விவகாரம் தொடர்பாக தனது தரப்பு கருத்துகளை பதிவு செய்தார்.

 

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.