“நாங்க ஆரம்பிச்சதை நீங்க நிறுத்தக் கூடாது” அகழாய்வுப் பணிகள் குறித்து புதிய அரசுக்கு ஸ்டாலின் கொடுத்த முக்கிய அட்வைஸ்….!!
SeithiSolai Tamil July 14, 2026 05:48 PM

திமுக ஆட்சிக் காலத்தில் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் தொடங்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க அகழாய்வுப் பணிகளை, தற்போது அமைந்துள்ள புதிய அரசும் தொடர்ந்து தொய்வின்றி மேற்கொள்ள வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். தமிழர் நாகரிகத்தின் ஆணிவேராகவும், அடையாளமாகவும் விளங்கும் கீழடி போன்ற வரலாற்றுத் தடங்களை உலகறியச் செய்து, தமிழர்களின் தொன்மையை உலக அரங்கில் நிலைநிறுத்த வேண்டியது தற்போதைய அரசின் முக்கிய கடமை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

​மேலும், மண்ணுக்குள்ளும் ஆழ்கடலுக்குள்ளும் மறைந்து கிடக்கும் இன்னும் பல ‘கீழடிகளை’ விரிவான அகழ்வாராய்ச்சி மற்றும் ஆழ்கடல் ஆய்வுகள் மூலம் வெளிக்கொண்டு வர வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இதன் மூலமாக மட்டுமே ஒட்டுமொத்த இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாற்றையும், இனிவரும் காலங்களில் தெற்கிலிருந்து தொடங்கி எழுத முடியும் என்று ஸ்டாலின் ஆணித்தரமாகத் தெரிவித்துள்ளார்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.